மகதேசன் பெருவழி

From Tamil Wiki
Revision as of 08:10, 13 September 2022 by Jeyamohan (talk | contribs)

மகதேசன் பெருவழி (பொயு 13 ஆம் நூற்றாண்டு) (பிறபெயர்கள். மகதைப் பெருவழி. ஆழகளூர் பெருவழி). சேலம் மாவட்டத்தில் ஆழகளூர் என்னும் சிற்றூரில் தொலைவுகாட்டிக் கல் ஒன்று கண்டடையப்பட்டது. அதில் அவ்வழியாக சென்ற ஒரு பெருவழியின் செய்தி உள்ளது. அந்த பெருவழி மகதேசன் பெருவழி என அழைக்கப்படுகிறது. இது சோழநாட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதை

இடம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் ஆறகளூர் கிராமம் (பின் கோடு 636101 – 11° 33′ 39.1428” N அட்சரேகை 78° 47′ 29.5332” E தீர்க்கரேகை) வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்நிலம் மகதை மண்டலம் எனப்பட்டது. இவ்வூரில் கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே 13-ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு (ஆறகழூர் மகதை பெருவழி யோசனைக்கல்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.


வாணர் என்ற சிற்றரச மன்னர் குலத்தினர் கொங்கு நாட்டின் வடக்கு பகுதியில் ’மகதை மண்டலம்’ எனக் கூறப்படுகின்ற இடத்திற்கு மன்னராக இருந்துள்ளனர். இவர்களுள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கீழிருந்து மகதை நாடாழ்வான் ’காஞ்சியும், வஞ்சியும் கொண்ட’ என்ற பெயரையும் பெற்றிருந்தான். இவன் காஞ்சி கொண்டதன் நினைவாக காஞ்சிக்கு செல்லும் மகதேசன் பெருவழி எழுப்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.