ப.முத்துக்குமாரசுவாமி (இசையறிஞர்)
ப. முத்துக்குமாரசுவாமி (23 ஆகஸ்ட் 1932 - 26 ஜூன் 2019) தமிழ் மரபிசை அறிஞர், இசை ஆசிரியர். பண்ணியல், தமிழிசைமரபு ஆகியவற்றில் ஆய்வுசெய்தவர். தமிழிசை அறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகரின் மாணவர்
பிறப்பு, கல்வி
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பரமசாமி குருக்கள், இரத்தினம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணத்தில் முடித்தபின்னர், 1950 களின் பிற்பகுதியில் இந்தியாவுக்குச் சென்று அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் இசைத்துறையில் மாணவராகச் சேர்ந்தார். அங்கே எம். எம். தண்டபாணி தேசிகர் இவருக்கு ஆசிரியராக வாய்த்தார். தண்டபாணி தேசிகர் இந்து சமய துதிப்பாடல்களையும் தமிழ் கிருதிகளையும் பாடுவதில் வல்லவராக இருந்தார். முத்துக்குமாரசுவாமி தனது குருவைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்கள் பாடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றார்.
இசைப்பணி
உசாத்துணை