being created

ப்ரியம்வதா ராம்குமார்

From Tamil Wiki
Revision as of 10:30, 21 June 2022 by Suchitra (talk | contribs)

ப்ரியம்வதா (1982) மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையை ஆங்கிலத்தில் ‘Stories of the True’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி, பணி

ப்ரியம்வதா சென்னையில் அக்டோபர் 14, 1982-ஆம் ஆண்டு ராம்குமார்-சுஜாதா இணையருக்கு பிறந்தார். சென்னை மைலாபூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்தார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலையும் ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

ப்ரியம்வதா மணமானவர். ப்ரியம்வதாவின் கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கி பணியிலிருந்து விலகி தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

இலக்கியப் பணிகள்

  1. ப்ரியம்வதா ஜெயமோகனின் 'அறம்' சிறுகதை தொகுதியை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். 'Stories of the True' என்ற பெயரில் அவர் மொழியாக்கம் ஜூலை 2022-இல் வெளியாக உள்ளது. [ஜக்கர்நாட் பதிப்பகம்]
  2. அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.