ப்ரியம்வதா ராம்குமார்: Difference between revisions
No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 8: | Line 8: | ||
ப்ரியம்வதா மணமானவர். ப்ரியம்வதாவின் கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கி பணியிலிருந்து விலகி தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார். | ப்ரியம்வதா மணமானவர். ப்ரியம்வதாவின் கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கி பணியிலிருந்து விலகி தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார். | ||
== இலக்கியப் பணிகள் == | == இலக்கியப் பணிகள் == | ||
# ப்ரியம்வதா ஜெயமோகனின் 'அறம்' சிறுகதை தொகுதியை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். 'Stories of the True' என்ற பெயரில் அவர் மொழியாக்கம் ஜூலை 2022- | # ப்ரியம்வதா ஜெயமோகனின் 'அறம்' சிறுகதை தொகுதியை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். 'Stories of the True' என்ற பெயரில் அவர் மொழியாக்கம் ஜூலை 2022-ல் வெளியாக உள்ளது. [ஜக்கர்நாட் பதிப்பகம்] | ||
# அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. | # அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. | ||
[[File:1656CB94-F6D0-4D32-8DCE-E45D0A57DE6B.jpg|thumb|Stories of the True]] | [[File:1656CB94-F6D0-4D32-8DCE-E45D0A57DE6B.jpg|thumb|Stories of the True]] |
Revision as of 23:40, 23 June 2022
ப்ரியம்வதா (1982) மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையை ஆங்கிலத்தில் ‘Stories of the True’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
பிறப்பு, கல்வி, பணி
ப்ரியம்வதா சென்னையில் அக்டோபர் 14, 1982-ஆம் ஆண்டு ராம்குமார்-சுஜாதா இணையருக்கு பிறந்தார். சென்னை மைலாபூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்தார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலையும் ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.
ப்ரியம்வதா தனியார் சமபங்கு நிதித்துறையில் பணியாற்றி வருகிறார். வணிக ரீதியில் மட்டும் அல்லாமல் சமூக அளவில் நலன் பயக்கும் நிறுவனங்களில் முதலீட்டு செய்வதோடு அந்நிறுவனங்களின் இயக்குநர் குழுமத்திலும் பங்காற்றுகிறார்.
தனிவாழ்க்கை
ப்ரியம்வதா மணமானவர். ப்ரியம்வதாவின் கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கி பணியிலிருந்து விலகி தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார்.
இலக்கியப் பணிகள்
- ப்ரியம்வதா ஜெயமோகனின் 'அறம்' சிறுகதை தொகுதியை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். 'Stories of the True' என்ற பெயரில் அவர் மொழியாக்கம் ஜூலை 2022-ல் வெளியாக உள்ளது. [ஜக்கர்நாட் பதிப்பகம்]
- அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது.
செயல்பாடுகள்
- 2021 ஆண்டிற்கான South Asia Speaks Fellowship Programme என்ற இலக்கியப் பட்டறையில் பங்கேற்க தேற்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'அறம்' தொகுதியை மொழியாக்கம் செய்தார்.
- 2022 ஆண்டிற்கான American Literary Translators Association (ALTA) நிறுவனம் நடத்தும் இளம் மொழியாக்கக்காரர்களுக்கான சர்வதேச பட்டறையில் (ALTA Emerging Translator's Mentorship Program) பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நாவலை மொழியாக்கம் செய்கிறார்.
உசாத்துணை
- https://spillwords.com/take-me-back/
- https://www.southasiaspeaks.org/fellows
- https://literarytranslators.wordpress.com/2022/02/10/meet-the-2022-emerging-translator-mentorship-program-mentees/
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.