ப்ரம்மவித்தியா பத்திரிகை
‘ப்ரம்மவித்தியா பத்திரிகை' தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இருமொழி வெளியீடாக சிதம்பரத்தில் இருந்து வெளிவந்த இதழ். பொது சகாப்தம் 1886 முதல் வெளியான இவ்விதழின் ஆசிரியர் கு.சீனிவாச சாஸ்திரியார். இந்து சமயம், வைதீக நெறிகள், இந்து மதத் தத்துவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியான இதழ் இது.
பதிப்பு, வெளியீடு
சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வமும் சமயப்பற்றும் உள்ள பலர் பல இதழ்களைத் தொடங்கி நடத்தினர். தீவிர மதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கிறித்துவ மதத்தினரின் செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும் அவர்களை விமர்சித்தும் பல இதழ்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று ப்ரம்ம வித்தியா.
இது சிதம்பரத்திலிருந்து பொது சகாப்தம் 1886 முதல் வெளியானது. மாதமிருமுறை இதழான இதன் ஆசிரியர் கு. சீனிவாச சாஸ்திரியார்.
இதழின் தனிப்பிரதி இந்தியாவிற்கு: 3 அணா, 6 நயா பைசா. இலங்கைக்கு: நான்கணா;
இதழின் சந்தா மூன்று மாதங்களுக்கு 9 அணா. இலங்கைக்கு 10 அணா;
ஆறு மாதங்களுக்கு 1 ரூபாய்; இலங்கைக்கு : 1 ரூபாய், நான்கணா;
இதழின் வருடச் சந்தா: இந்தியா - 1 ரூபாய் 12 அணா; இலங்கை - 2 ரூபாய் நான்கணா;
- என்று நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சிதம்பரம் ப்ரம்ம வித்தியா அச்சகத்தில் இருந்து இந்த இதழ் வெளியிடப்பட்டது.
உள்ளடக்கம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.