பொ.வே. சோமசுந்தரனார்: Difference between revisions

From Tamil Wiki
Line 13: Line 13:
உரையாசிரியராக பெருமழைப் புலவர் முதலில் எழுதிய உரை  திருவாசகத்திற்கு .பண்டிதமணி கதிரேசச் செட்டியார்  தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை அவரிடம்  ஒப்படைத்து, அதை எழுதி முடிக்க வேண்டினார்.   
உரையாசிரியராக பெருமழைப் புலவர் முதலில் எழுதிய உரை  திருவாசகத்திற்கு .பண்டிதமணி கதிரேசச் செட்டியார்  தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை அவரிடம்  ஒப்படைத்து, அதை எழுதி முடிக்க வேண்டினார்.   


திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பக்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால், சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதினார்.
திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பக்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால், சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதினார்.தன் உரைகளில் தகுந்த காரணங்களைச் சுட்டி, பழைய உரையாசிரியர்களை மறுத்தும் எழுதியவர் பெருமழைப் புலவர்.


எட்டுத்தொகை நூல்கள் ஐந்திற்கும், ஐம்பெருங்காப்பியங்கள் சில சிறு காப்பியங்களுக்கும், திருக்கோவையார் உள்லிட்ட பல நூல்களுக்கு  உரையெழுதி அளித்துள்ளார்.
எட்டுத்தொகை நூல்கள் ஐந்திற்கும், ஐம்பெருங்காப்பியங்கள் சில சிறு காப்பியங்களுக்கும், திருக்கோவையார் உள்லிட்ட பல நூல்களுக்கு  உரையெழுதி அளித்துள்ளார்..
 
சங்க இலக்கியங்களான ‘நற்றினை’, ‘குறுந்தொகை’, ‘அகநானூறு’, ‘ஐங்குறுநூறு’, ‘கலித்தொகை’, ‘பெருங்காப்பியங்களான ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘சீவகசிந்தாமணி’, ‘வளையாபதி’, ‘குண்டலகேசி’, சிறுகாப்பியங்களான ‘உதயணகுமார காவியம்’, ‘நீலகேசி மற்றும் பெருங்கதை’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘கல்லாடம்’, ‘பரிபாடல்’, ‘ஐந்திணை எழுபது’, ‘ஐந்திணை ஐம்பது’, ‘திருக்கோவையார்’, ‘பட்டினத்தார் பாடல்’, முதலிய நூல்களுக்கு சோமசுந்தரனார் உரையெழுதி அளித்துள்ளார்.


மேலும், ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு முதலிய உரைநடை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.
மேலும், ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு முதலிய உரைநடை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.


தன் உரைகளில் தகுந்த காரணங்களைச் சுட்டி, பழைய உரையாசிரியர்களை மறுத்தும் எழுதியவர் பெருமழைப் புலவர்.
== ப்டைப்புகள் ==
 
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-வது நூல் வெளியீட்டு பொன்விழாவில், சோமசுந்தரனார் கேடயம் அளித்து போற்றிச் சிறப்பிக்கப்பட்டார்.
 
== படைப்புகள் ==


=== உரைகள் ===
=== உரைகள் ===

Revision as of 22:37, 8 March 2022

This page is being created by Jayashree

பிறப்பு,கல்வி

தனது ஊர்ப்பெயரால் பெருமழைப் புலவர் என பெயர் பெற்ற சோமசுந்தரனார் (05.09.1909 -03.01.1972) திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில், வேலுத்தேவர் - சிவகாமியம்மாள் தம்பதிக்கு செப்டம்பர் 5-, 1909 ல் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் துதூ, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார். தொடர்ந்து பள்ளியில் படிக்க முடியாமல் உழவு வேலைக்குச் செல்ல நேர்ந்தாலும் கோவில்களிலும் மடங்களிலும் உள்ள நூல்களைப் பயின்றார்..

10 வயதில் தாயை இழந்து , தந்தையின் மறுமணத்துக்குப் பின் சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார். அவரது கல்வி ஆர்வத்தை உணர்ந்த சர்க்கரைப் புலவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று பயிலுமாறு வழிநடத்தி தமிழாசிரியர் பூவராகம்பிள்ளை என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்தார்.

சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சோழவந்தான் கந்தசாமியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், விபுலானந்த அடிகள் முதலியவர்களை ஆசிரியர்களாக அடையும் நல்வாய்ப்பு கிட்டியது.

‘புலவர்’ படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றும், தமிழ் அறியாத ஆங்கிலேயே ஆளுநர் எர்ஸ்கின்பிரபு பட்டமளிப்பில் வழங்கிய சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டார்.

இலக்கியப் பணி

உரையாசிரியராக பெருமழைப் புலவர் முதலில் எழுதிய உரை திருவாசகத்திற்கு .பண்டிதமணி கதிரேசச் செட்டியார் தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை அவரிடம் ஒப்படைத்து, அதை எழுதி முடிக்க வேண்டினார்.

திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பக்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால், சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதினார்.தன் உரைகளில் தகுந்த காரணங்களைச் சுட்டி, பழைய உரையாசிரியர்களை மறுத்தும் எழுதியவர் பெருமழைப் புலவர்.

எட்டுத்தொகை நூல்கள் ஐந்திற்கும், ஐம்பெருங்காப்பியங்கள் சில சிறு காப்பியங்களுக்கும், திருக்கோவையார் உள்லிட்ட பல நூல்களுக்கு உரையெழுதி அளித்துள்ளார்..

மேலும், ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு முதலிய உரைநடை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

ப்டைப்புகள்

உரைகள்

  • குறுந்தொகை
  • அகநானூறு
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • பரிபாடல்
  • பத்துப்பாட்டு
  • ஐந்திணை எழுபது
  • ஐந்திணை ஐம்பது
  • சிலப்பதொகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி
  • உதயணகுமார காவியம்
  • நீலகேசி
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • பெருங்கதை
  • கல்லாடம்
  • திருக்கோவையார்
  • பட்டினத்தார் பாடல்கள்

நாடகம்

  • செங்கோல்
  • மானனீகை

வாழ்க்கை வரலாறு

பண்டிதமணி