பேதுறுப்புலவர்
From Tamil Wiki
Revision as of 10:03, 20 April 2022 by Tamizhkalai (talk | contribs)
பேதுறுப்புலவர் (18-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். இவர் இயற்றிய ஞானப்பள்ளு முக்கியமான நூலாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
பேதுறுப்புலவர் 18-ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். கத்தோலிக்க சமயத்தவர்.
இலக்கிய வாழ்க்கை
இயேசுவை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட சிற்றிலக்கியம் ஞானப்பள்ளு. இந்நூலுக்கு வேதப்பள்ளு என்ற பெயரும் உண்டு. இது கத்தோலிக்க மதப்பற்றை மக்களிடையே பெருக்குவதனை குறிக்கோளாகக் கொண்டது. செபஸ்தியான் பொன்சேகா சுவாமிகளின் வேண்டுகொளுக்கிணங்கவே ஞானப்பள்ளு இயற்றப்பட்டது. ஞானப்பள்ளு 1650-ம் ஆண்டுக்கு முன்பு இயற்றப்பட்டதாகலாம்.
நூல்கள் பட்டியல்
பள்ளு
- ஞானப்பள்ளு
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.