being created

பெருந்தேவபாணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 30: Line 30:
</poem>
</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==
[http://www.tamilvu.org/node/154572?link_id=61819 பெருந்தேவபாணி, தமிழ் இணைய கல்விக் கழகம்] {{Being created}}
[http://www.tamilvu.org/node/154572?link_id=61819 பெருந்தேவபாணி, தமிழ் இணைய கல்விக் கழகம்]
 
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:47, 15 August 2023

பெருந்தேவபாணி பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறும் நூல்.

ஆசிரியர்

பெருந்தேவபாணியை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

தேவ பாணி’ தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பரவிய பாடல்களைக் குறிக்கும். நக்கீரதேவர் திருவாலவாயிறைவனை ‘சிவபெருமானே பெருந்தேவன்’ எனக்கொண்டு முன்னிலைப்படுத்திப் பாடியதால் பெருந்தேவபாணி என்று பெயர் பெற்றது. ஆறுபத்தேழு அடிகளா­லான ஆசிரியப்பாவாக ஆமைந்துள்ளது. சிவனின் புகழை 56 அடிகளில் பாடுகிறது.ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறப்பு சொல்லப்படுகிறது. இறுதியில் 'கூடலாலவாய்க் குழகன் ஆவது அறியாது அருந்தமிழ் பழித்தனன் அடியேன். அருளல் வேண்டும்' என மன்னிப்புக் கேட்டுப் பாடல் முடிகிறது.

பாடல் நடை

சிவனின் பெருமை

நீடிய நிமலனை
  நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை
  ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர்
  நெஞ்சத் துள்ளனை
தாதணி மலரனை
  தருமனை பிரமனை
காதணி குழையனை
  களிற்றின் உரியனை

மன்னிப்பு வேண்டுதல்

விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் செய்யும் அருள்.

உசாத்துணை

பெருந்தேவபாணி, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.