being created

பூரம் சத்தியமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 19:08, 1 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Image Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பூரம் எஸ். சத்தியமூர்த்தி

சிறார் கதைகள், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுத்துலகில் செயல்பட்டவர் எஸ். சத்தியமூர்த்தி (பூரம் சத்தியமூர்த்தி; 1937 - 2016) மக்களிடையே சிறுகதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ’சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல சிறுகதை விமர்சனக் கூட்டங்களை நடத்தியவர். ‘எழுத்துலக இமயம் பூரம் சத்தியமூர்த்தி’ என்ற தலைப்பில், இவரைப் பற்றிய ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக் கண்ணன் தயாரித்து அளித்துள்ளார்.

பிறப்பு, கல்வி

சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1937 அன்று, புதுக்கோட்டையில், டி.சீனிவாச ஐயங்கார்- சீதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், மேல் நிலைக் கல்வியை ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். திருமணமானது. அமுதன் சீனிவாசன், ராமானுஜன் என்று ஒரு மகன்களும், அனுசூயா, வேதவல்லி என இரு மகள்களும் பிறந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

தாய் சீதா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைச் சிறு வயது முதலே வாசித்து வந்தார் பூரம் சத்தியமூர்த்தி. எழுத்தார்வத்தினால், மாமன்னர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிறார்களுக்கான சிறுகதைகளை எழுத முற்பட்டார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டிங் டாங்' சிறார் இதழில் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளியாகின. தொடர்ந்து 'கண்ணன்' குழந்தைகள் இதழில் இவரது சிறுகதைகளும் நாடகங்களும் வெளியாகின.

சென்னைக்கு வந்ததும் தனது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். கோகுலம், ரத்னபாலா, ஆதவன், கல்கண்டு, பாப்பா மஞ்சரி, சின்ன கண்ணன் போன்ற சிறார் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுத விரும்பிய பூரம் சத்தியமூர்த்தி, கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டார். இவர் எழுதிய `கருவளை” என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. 1990-ம் ஆண்டு அகில இந்திய வானொலி நடத்திய வானொலிப் போட்டியில், இவரது நாடகம் ஒலிபரப்பப்பட்டது.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.