புகழ். முத்துச்சாமிப்பிள்ளை: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 30: | Line 30: | ||
* தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955 | * தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955 | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 08:22, 24 April 2022
புகழ். முத்துச்சாமிப்பிள்ளை (1890-1950) தமிழறிஞராகவும், சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, கல்வி
இவர் தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆகஸ்ட் 16, 1890 அன்று புகழும்பெருமாள், சுப்பம்மையார் தம்பதியர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் தொடக்க கல்வியை உடன்குடியிலே பயின்றார். பின்னர் தமது 12-ஆவது வயதில் சிதம்பரத்திற்கு வந்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் நான்காண்டுகள் தமிழ் கற்றார். இவருடைய நெருங்கிய நண்பராக மறைமலை அடிகளார் இருந்தார்.
தனிவாழ்க்கை
இவர் தன்னுடைய தந்தையாரின் தொழிலான பலசரக்கு வியாபாரமும், மாணவர்களுக்கு தமிழும் சொல்லித்தந்தார்.
பங்களிப்பு
இவர் செந்தமிழ்செல்வியில் பலகட்டுரைகள் எழுதியுள்ளார். பாளையங்கோட்டைச் சைவசபைகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இவர் இயற்றிய நூல்கள்
- ஒழுக்க விளக்கம்
- செல்வகணபதி இரட்டைமணிமாலை
- தேவார உரை
- திருவாசக திருச்சதக உரை
இவர் உடன்குடியில் ஒரு நடுநிலைப்பள்ளியை ஏற்படுத்தினார். மேலும் ஊர் பயன்பாட்டுக்காக பொதுக்கிணறு ஒன்றை அறக்கிணறு என்ற பெயரில் ஏற்படுத்தினார். அது 1955 வரை பயன்பாட்டில் இருந்தது.
மறைவு
இவர் டிசம்பர் 17, 1950 அன்று தமது 60-ஆவது வயதில் மறைந்தார்.
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.