பீதாம்பரப் புலவர்
From Tamil Wiki
Revision as of 01:12, 19 October 2023 by Tamizhkalai (talk | contribs)
பீதாம்பரப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பீதாம்பரப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சண்முகம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தெல்லிப்பழையில் அமெரிக்க மிஷன் நிறுவிய ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்றார். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
பீதாம்பரப் புலவர் சிற்றிலக்கிய நூல்கள் இயற்றினார்.
நூல் பட்டியல்
- மறைசைக் கலம்பகம்
- மறைசைத் திருப்புகழ்
- நீர்வை வெண்பா
- வல்லிபுரநாதர் பதிகம்
உசாத்துணை
✅Finalised Page