under review

பிரியந்தனா தியாகராஜா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 11: Line 11:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:பிரியந்தனா, தியாகராஜா: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:பிரியந்தனா, தியாகராஜா: noolaham]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 22:27, 16 April 2024

பிரியந்தனா தியாகராஜா (பிரியா காசிநாதன்) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். சிறுவர்களுக்கான தன்னம்பிக்கை கவிதைகள், தமிழ்மொழி தொடர்பான கவிதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிரியந்தனா தியாகராஜா இலங்கை யாழ்ப்பாணம் கொக்குவிலில் தியாகராஜா, மங்களநாயகி இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யா/கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் கற்றார். ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். British way English Academy இல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். முகாமைத்துவம் தொடர்பாகக் கற்றார். இலங்கையில் ஒலிபரப்பாகும் ஒலி ஊடக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் இரண்டிலும் திறனுள்ளவர். வயலின் கலைஞர். குறும்படங்களுக்கும் பாடல் எழுதினார்.

அமைப்புப் பணிகள்

பிரியந்தனா தியாகராஜா சுன்னாகம் ரோட்டரி கிளப் மற்றும் 'சிறகுகள்' அமையத்தில் உறுப்பினராக வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

பிரியந்தனா தியாகராஜா 'பிரியா காசிநாதன்' எனும் புனைபெயரில் எழுதினார். தினக்குரல் பத்திரிகையிலும் 'சாரதி' என்னும் சஞ்சிகையிலும் இவரது கவிதை, கட்டுரைகள் வெளிவந்தன. சிறுவர்களுக்கான தன்னம்பிக்கை கவிதைகள், தமிழ்மொழி தொடர்பான கவிதைகள் எழுதினார். பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் கட்டுரைகள் எழுதினார். அமுதசுரபி அறக்கட்டளை நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது.

விருது

  • நிலா முற்றம் குழுமத்தின் ஊடாக இவர் எழுதிய கவிதைகள் பல சான்றிதழ்களை பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page