பிரயாகை (வெண்முரசு நாவலின் ஐந்தாம் பகுதி)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
பிரயாகை (‘வெண்முரசு’ நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். கிருஷ்ணர் (இளைய யாதவர்) தன் நாட்டினை மீட்பதற்காகத் தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் ‘பிரயாகை’ நிறைவுறுகிறது.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் ஐந்தாம் பகுதியான ‘பிரயாகை’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2015 இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
கிழக்கு பதிப்பகம் பிரயாகையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
கதை மாந்தர்
உசாத்துணை
- https://venmurasu.in/prayagai/chapter-1
- https://venmurasudiscussions.blogspot.com/
- https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
[[Category:Tamil Content]]