பித்துக்குளி முருகதாஸ்
பித்துக்குளி முருகதாஸ் (25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்
வாழ்க்கைக் குறிப்பு
பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் ஜனவரி 25, 1920இல் கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன். பித்துக்குளி முருகதாஸ் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர்.
ஆன்மிகம்
1936இல் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியை சந்தித்த பின்னர், பக்தி வழிக்கு வந்தார். 1940இல் ரிஷிகேஸம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.
இசை
தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்தார்ர்.
விருதுகள்
- சங்கீத சாம்ராட் - 1956 இல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது
- கலைமாமணி - 1984 இல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
- குரு சுராஜானந்தா விருது 1989 இல்
- மதுர கான மாமணி - 1994 இல் இலண்டனில்
- சங்கீத நாடக அகாடமி விருது 1998 இல்
- தியாகராஜர் விருது - தில்லி தான்சேன் விழாவில்
- தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.
மறைவு
2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்
பாடிய பிரபல பக்திப் பாடல்கள்
- அலை பாயுதே கண்ணா
- கண்ணா .. மதுர மதுர வேணுகீத மோக
- ஆடாது அசங்காது வா கண்ணா
- கண்டார் அனுபூதி
- அம்மா தாயே கலைவாணி
- கருங்காலி முருகன்
- மகர குண்டலம்
- முடியப் பிறவிக்கடல்
- ஹரி குணம் படி
- கல்யாண முருகனுக்கு
- அப்பா அப்பா
- உலகம் எங்கும்
- ஸ்வாகதம்
- ஆறிரு தடந்தோள்
- செந்தூர் முருகா
- கண்ணன் பார்வை
திரைப்பட பக்திப் பாடல்கள்
- நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை - தெய்வம் (திரைப்படம்)