பா. ராகவன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Pa.Ra..jpg|thumb|எழுத்தாளர் பா. ராகவன்]] | [[File:Pa.Ra..jpg|thumb|எழுத்தாளர் பா. ராகவன்]] | ||
'''பா. ராகவன்''' (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர். பதிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். [https://www.madraspaper.com/ ‘மெட்ராஸ் பேப்பர்’] என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். தன்னுடைய படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். | '''பா. ராகவன்''' (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர். பதிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். [https://www.madraspaper.com/ ‘மெட்ராஸ் பேப்பர்’] என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். தன்னுடைய படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பலவற்றுக்கு வசன கர்த்தாவாக இருந்துள்ளார். இவரின் வசனத்தில் வெளிவந்த வாணி-ராணி என்ற நெடுந்தொடர் 1750 எபிசோடுகளாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. | ||
'''பிறப்பு, கல்வி''' | '''பிறப்பு, கல்வி''' | ||
Line 15: | Line 15: | ||
'''இலக்கிய வாழ்க்கை''' | '''இலக்கிய வாழ்க்கை''' | ||
பா. ராகவனின் முதல் படைப்பான குழந்தைப்பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. | பா. ராகவனின் முதல் படைப்பான குழந்தைப்பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது பல கவிதைகளை எழுதி உள்ளார். பின்னர் இவர் தீவிர இலக்கியப் படைப்புகளைப் படித்து, சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். கவிஞர் நா.சீ. வரதராஜன் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து தீவிர இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் ஈடுபட்டார். மனக்கொந்தளிப்பின் காரணமாகத் துறவியாகிவிட நினைத்தார். இதன் காரணமாக சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் வசிப்பிடம் ஆகியனவற்றுக்குச் சென்று வந்தார். இறுதியில் ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த [https://belurmath.org/past-vicepresidents/swami-tapasyananda/ சுவாமி தபஸ்யானந்தா]வின் உபதேசத்துக்கு இணங்கி, இல்வாழ்வுக்கும் இலக்கியப் படைப்பாக்க முயற்சிகளுக்கும் திரும்பினார். பின்னர் அமுதசுரபி இதழில் பணியாற்றினார். ம.வே. சிவகுமாரின் நட்பால் பத்திரிகைகளில் எழுதினார். பின்னர் கல்கி இதழில் எட்டாண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் குமுதம் இதழிலும் பணியாற்றினார். | ||
'''இலக்கிய இடம்''' | '''இலக்கிய இடம்''' |
Revision as of 21:40, 9 May 2023
பா. ராகவன் (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர். பதிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். தன்னுடைய படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பலவற்றுக்கு வசன கர்த்தாவாக இருந்துள்ளார். இவரின் வசனத்தில் வெளிவந்த வாணி-ராணி என்ற நெடுந்தொடர் 1750 எபிசோடுகளாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறப்பு, கல்வி
பா. ராகவன் ஆர். பார்த்தசாரதி – ரமாமணி தம்பதியருக்கு அக்டோபர் 08, 1971 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். பா. ராகவனின் தந்தை ஆர். பார்த்தசாரதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வியாளர். அவர் ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பாளரும்கூட. ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’, பாபர் நாமா, மகா வம்சம் ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் வந்தவை.
பா. ராகவன் காஞ்சிபுரம் கிருஷ்ணா ஸ்கூல், கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி எனத் தன் தந்தைக்குப் பணி மாறுதல்கள் ஏற்பட்டபோதெல்லாம் தன் குடும்பம் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். பின்னர் பா. ராகவனின் குடும்பம் சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்டது.
தனிவாழ்க்கை
பா. ராகவனின் மனைவி பெயர் ஆர். ரம்யா. மகள் பெயர் ஆர். பாரதி.
இலக்கிய வாழ்க்கை
பா. ராகவனின் முதல் படைப்பான குழந்தைப்பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது பல கவிதைகளை எழுதி உள்ளார். பின்னர் இவர் தீவிர இலக்கியப் படைப்புகளைப் படித்து, சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். கவிஞர் நா.சீ. வரதராஜன் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து தீவிர இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் ஈடுபட்டார். மனக்கொந்தளிப்பின் காரணமாகத் துறவியாகிவிட நினைத்தார். இதன் காரணமாக சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் வசிப்பிடம் ஆகியனவற்றுக்குச் சென்று வந்தார். இறுதியில் ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் உபதேசத்துக்கு இணங்கி, இல்வாழ்வுக்கும் இலக்கியப் படைப்பாக்க முயற்சிகளுக்கும் திரும்பினார். பின்னர் அமுதசுரபி இதழில் பணியாற்றினார். ம.வே. சிவகுமாரின் நட்பால் பத்திரிகைகளில் எழுதினார். பின்னர் கல்கி இதழில் எட்டாண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் குமுதம் இதழிலும் பணியாற்றினார்.
இலக்கிய இடம்
நூல்கள்
விருதுகள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.