பாஹிமா மீராசாஹிப்

From Tamil Wiki
Revision as of 18:50, 9 March 2024 by Ramya (talk | contribs)

பாஹிமா மீராசாஹிப் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

பாஹிமா மீராசாஹிப் இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனையில் மீராசாஹிப், சஹர்வான் பீவி இணையருக்குப் பிறந்தார். வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலயத்தில் உயர் கல்வி கற்றார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலத்தில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பாஹிமா மீராசாஹிப் பள்ளிக்காலம் முதல் கவிதைகள் எழுதினார். விதையென விழு என்னும் கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • விதையென விழு

உசாத்துணை

  • ஆளுமை:பாஹிமா, மீராசாஹிப்: noolaham

Template:Being Created