பாவண்ணன்

From Tamil Wiki
Revision as of 21:58, 19 January 2022 by Logamadevi (talk | contribs) (முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாவண்ணன்

பாவண்ணன் 1980களிலிருந்து எழுதிவரும் தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் பாஸ்கரன். இவர் 20.10.1958 அன்று பிறந்தார். புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த பிறகு,கர்நாடகத்தில் இளம்பொறியாளராக பணியாற்றினார். கோட்டப் பொறியாளராக பணி ஓய்வு பெற்று இப்போது பெங்களூரில் வசிக்கிறார்.

சிறுகதைகள், கவிதைகள் , நாவல்கள், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் என தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக, கன்னட மொழியிலிருந்து சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என பல முக்கியமான படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.

இவருடைய பாய்மரக்கப்பல் என்னும் நாவல் 1995 ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனை விருதைப் பெற்றது. அதே ஆண்டில் இவர் எழுதிய பயணம் என்னும் சிறுகதை கதா விருதைப் பெற்றது. 2005 ஆம் ஆண்டு இவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த பருவம் என்னும் நாவலுக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கிறார்.


பிறப்பு,கல்வி

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 20.10.1958 அன்று பலராமன் , சகுந்தலா ஆகியோருக்கு மகனாக பிறந்தார், வளவனூர் ஊராட்சிமன்ற தொடக்கப்பள்ளி, கோவிந்தையர் பள்ளி, அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தொடக்ககல்வியை முடித்தார்.விழுப்புரம் அண்ணா கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பையும், புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பையும் முடித்தார்

தனிவாழ்க்கை

அமுதாவை, 22.08.1987 அன்று மணமுடித்தார். மகன். பெயர்- அம்ரிதா மயன் கார்க்கி

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் சிறுகதை ’பழுது’ 1982 ல் தீபம் இதழில் பிரசுரமானது. நாட்டார்கதை, புராணம், தொன்மம் என பல தளங்களில் புதிய கதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் பாவண்ணன், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை புதுச்சேரியுடன் பிணைத்துக்கொண்ட பாவண்ணன், “புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர். இவர் எழுத்துப்போராளி என்றும் அழைக்கப்படுகிறார்.

பாவண்ணனின் இலக்கியப் பணியில் மொழிபெயர்ப்பு மிக முக்கியமான அங்கம். கன்னட மொழியில் உள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று இவரது மொழிபெயர்ப்பில் பல முக்கியமான படைப்புகள் வெளிவந்திருக்கின்றன., எஸ்.எல். பைரப்பாவின் ’பருவம்’, ராகவேந்திரபாட்டீலின் ’தேர்’ என்பவை குறிப்பிடத்தக்க நாவல் மொழிபெயர்ப்புகள். இவரது கன்னட தலித் சிறுகதைகள் என்ற பொழிபெயர்ப்பு கதைத் தொகுப்பு மிகவும் குறிப்பித்தக்து.

தனது.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக கு.அழகிரிசாமி, மக்சீம் கார்க்கி, ஜெயகாந்தன், வண்ணதாசன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

நூல்பட்டியல்-(இதுவரை)

சிறுகதைகள்

  • வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987 காவ்யா பதிப்பகம்)
  • பாவண்ணன் கதைகள் (1990 அன்னம் பதிப்பகம்)
  • வெளிச்சம் (1990 மீனாட்சி பதிப்பகம்)
  • வெளியேற்றம் (1991 காவ்யா பதிப்பகம்)
  • நேற்று வாழ்ந்தவர்கள் (1992 காவ்யா பதிப்பகம்)
  • வலை (1996 தாகம் பதிப்பகம்)
  • அடுக்கு மாளிகை (1998 காவ்யா பதிப்பகம்)
  • நெல்லித் தோப்பு (1998 ஸ்நேகா பதிப்பகம்)
  • ஏழுலட்சம் வரிகள் (2001 காவ்யா பதிப்பகம்)
  • ஏவாளின் இரண்டாவது முடிவு (2002 தமிழினி பதிப்பகம்)
  • கடலோர வீடு (2004 காவ்யா பதிப்பகம்)
  • வெளியேற்றப்பட்ட குதிரை (2006 அகரம் பதிப்பகம்)
  • இரண்டு மரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
  • பொம்மைக்காரி (2011 சந்தியா பதிப்பகம்)
  • பச்சைக்கிளிகள் (2014 சந்தியா பதிப்பகம்)
  • பாக்குத்தோட்டம் ( 2014, உயிர்மை பதிப்பகம் )
  • கண்காணிப்புக் கோபுரம் (2016, சந்தியா பதிப்பகம்)
  • பிரயாணம் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- 2016, காலச்சுவடு பதிப்பகம்)
  • ஆனந்த நிலையம் (2020, சந்தியா பதிப்பகம் )
  • கனவு மலர்ந்தது (2020, சந்தியா பதிப்பகம் )

நாவல்கள்

  • வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்)
  • சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் )
  • பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்)

குறுநாவல்கள்

  • இது வாழ்க்கையில்லை (1989 சரவணபாலு பதிப்பகம்)
  • ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்)

கவிதைகள்

  • குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997 விடியல் பதிப்பகம்)
  • கனவில் வந்த சிறுமி (2006 அகரம் பதிப்பகம்)
  • புன்னகையின் வெளிச்சம் (2007 சந்தியா பதிப்பகம்)

கட்டுரைகள்

  • எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
  • எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
  • ஆழத்தை அறியும் பயணம் (2004 காலச்சுவடு பதிப்பகம்)
  • தீராத பசிகொண்ட விலங்கு (2004 சந்தியா பதிப்பகம்)
  • வழிப்போக்கன் கண்ட வானம் (2005 அகரம் பதிப்பகம்)
  • எழுத்தென்னும் நிழலடியில் (2004 சந்தியா பதிப்பகம்)
  • மலரும் மணமும் தேடி (2005 சந்தியா பதிப்பகம்)
  • இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006 சந்தியா பதிப்பகம்)
  • நதியின் கரையில் (2007 எனி இந்தியன் பதிப்பகம், 2018, சந்தியா பதிப்பகம்)
  • துங்கபத்திரை (2008 எனி இந்தியன் பதிப்பகம், 2017, சந்தியா பதிப்பகம்)
  • ஒரு துண்டு நிலம் (2008 அகரம் பதிப்பகம்)
  • உரையாடும் சித்திரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
  • வாழ்வென்னும் வற்றாத நதி (2008 அகரம் பதிப்பகம்)
  • ஒட்டகம் கேட்ட இசை (2010 காலச்சுவடு பதிப்பகம்)
  • அருகில் ஒளிரும் சுடர் (2010 அகரம் பதிப்பகம்)
  • மனம் வரைந்த ஓவியம் (2011 அகரம் பதிப்பகம்)
  • புதையலைத் தேடி (2012 சந்தியா பதிப்பகம்)
  • கனவுகளும் கண்ணீரும் (2014, என்.சி.பி.எச். வெளியீடு)
  • படகோட்டியின் பயணம் (2017, என்.சி.பி.எச். வெளியீடு)
  • வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் (2017, சந்தியா பதிப்பகம்)
  • கதவு திறந்தே இருக்கிறது (2018, பாரதி புத்தகாலயம்)
  • சிட்டுக்குருவியின் வானம் (2018 சந்தியா பதிப்பகம்)[2]
  • சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2019, சந்தியா பதிப்பகம்)
  • ஒரு சொல்லின் வழியாக (2019, என்.சி.பி.எச். வெளியீடு)
  • எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2020, சந்தியா பதிப்பகம் )
  • வற்றாத நினைவுகள் (2021, என்.சி.பி.எச். வெளியீடு)
  • நான் கண்ட பெங்களூரு (2021, சந்தியா பதிப்பகம்)
  • ஒன்பது குன்று (2021, சிறுவாணி வாசகர் மையம்)
  • என் வாழ்வில் புத்தகங்கள் (2021, சந்தியா பதிப்பகம் )
  • மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2021, சந்தியா பதிப்பகம்)
  • ம.இலெ.தங்கப்பா –(இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை, சாகித்திய அகாதெமி வெளியீடு, 2021)

குழந்தைகளுக்கான நூல்கள்

  • பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992 கலைஞன் பதிப்பகம்)
  • பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009 அகரம் பதிப்பகம்)
  • யானை சவாரி - பாடல்கள் (2014, பாரதி புத்தகாலயம்)
  • மீசைக்காரப் பூனை- பாடல்கள் (2016, பாரதி புத்தகாலயம்)
  • எட்டு மாம்பழங்கள் - பாடல்கள் (2017, பாரதி புத்தகாலயம்)
  • நான்கு கனவுகள் - சிறுகதைகள் (2018, நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங்)
  • கன்றுக்குட்டி - பாடல்கள் (2019, பாரதி புத்தகாலயம்)
  • கொண்டைக்குருவி – பாடல்கள் (2021, பாரதி புத்தகாலயம்)


ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்

  • நீர்யானை முடியுடன் இருந்தபோது (1998 ஆப்பிரிக்க வனவிலங்களைப்பற்றிய கதைகள், என்பிடி)
  • காட்டின் கதைகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  • வியப்பூட்டும் பாலூட்டிகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  • மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  • கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் )

கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்

  • கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
  • பலிபீடம் (1992 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
  • நாகமண்டலம் (1993 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
  • மதுரைக்காண்டம் (1994 நாடகம், காவ்யா பதிப்பகம்)
  • வினைவிதைத்தவன் வினை அறுப்பான் (1995 நாவல், என்பிடி)
  • புதைந்த காற்று (1996 தலித் எழுத்துகளின் தொகைநூல், விடியல் பதிப்பகம்)
  • ஊரும் சேரியும் (1996 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
  • கல்கரையும் நேரம் (1998, லங்கேஷ் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
  • கவர்மென்ட் பிராமணன் (1998 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
  • பசித்தவர்கள் (1999 நாவல், என்பிடி)
  • வடகன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001, சாகித்திய அகாதெமி)
  • அக்னியும் மழையும் (2002 நாடகம், காவ்யா பதிப்பகம்)
  • பருவம் (2002 நாவல், சாகித்திய அகாதெமி)
  • ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் (2004 நவீன கன்னட இலக்கிய எழுத்துகள் தொகைநூல், அகரம் பதிப்பகம்)
  • நூறு சுற்றுக்கோட்டை (2004 நவீன கன்னட சிறுகதைகள் தொகைநூல்)
  • ஓம் நமோ (2008 நாவல், சாகித்திய அகாதெமி)
  • அக்னியும் மழையும் (2011 ஆறு நாடகங்களின் தொகைநூல், காலச்சுவடு பதிப்ப‌கம்)
  • தேர் (2010 நாவல், சாகித்திய அகாதெமி)
  • வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் (2013 கட்டுரை, காலச்சுவடு பதிப்ப‌கம்)
  • வாழ்வின் தடங்கள் (தன்வரலாறு, 2017, காலச்சுவடு பதிப்பகம்)
  • சிதைந்த பிம்பம் (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
  • அஞ்சும் மல்லிகை (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
  • திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
  • அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் )


விருதுகள்

  • புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது(வாழ்க்கை ஒரு விசாரணை) - 1987
  • இலக்கியச் சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது – பச்சைக்கிளிகள்
  • என்.சி.பி.எச். வழங்கும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத்தொகுதிக்கான விருது - கனவுகளும் கண்ணீரும்
  • சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது -2016
  • வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கிய புதுமைப்பித்தன் விருது -2018
  • எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021

இணைப்புகள்

https://solvanam.com/2021/10/24/ உண்மைகள்-எளிதானவை-பாவண்//