பாரிமகளிர்
From Tamil Wiki
Revision as of 21:58, 23 April 2023 by Ramya (talk | contribs) (Created page with "பாரிமகளிர் சங்ககாலப் பெண்பாற் புலவர்களில். பாரி மன்னரின் இரு மகளிர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது. பார்க்க: கபிலர் ==...")
பாரிமகளிர் சங்ககாலப் பெண்பாற் புலவர்களில். பாரி மன்னரின் இரு மகளிர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது. பார்க்க: கபிலர்
வாழ்க்கைக் குறிப்பு
பிரான்மலை என அழைக்கப்படும் பரம்புமலை சூழ்ந்த முந்நூறு ஊர்களைக் கொண்ட நாட்டின் மன்னனாக இருந்த பாரி மன்னனின் மகளிர் இருவர்.
இலக்கிய வாழ்க்கை
பாரி மன்னன் கொல்லப்பட்ட பின்பு புலவர் கபிலர் அவர்களை அழைத்துச் சென்ற போது பாரி மகளிர் பாடிய பாடலாக உள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- “கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார். இன்று இல்லை. எம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்தது. எம் குன்றத்தையும் வென்ற வேந்தர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.” என பாரி மகளிர் வருந்துவதாக பாடல் உள்ளது.
பாடல் நடை
- புறநானூறு 112
(திணை: பொதுவியல்) (துறை: கையறு நிலை)
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.