பரவூர் ஸ்ரீதரன் தந்திரி

From Tamil Wiki
Revision as of 05:53, 26 May 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பரவூர் ஸ்ரீதரன் தந்திரி (1925- ) இந்து ஆலயங்களை நிறுவுவது, பூசை செய்வது ஆகியவற்றி பொறுப்பு கொண்ட தலைமை பூசகர். கேரள இந்துமத வழிபாட்டு முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய முன்னோடி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பரவூர் ஸ்ரீதரன் தந்திரி (1925- ) இந்து ஆலயங்களை நிறுவுவது, பூசை செய்வது ஆகியவற்றி பொறுப்பு கொண்ட தலைமை பூசகர். கேரள இந்துமத வழிபாட்டு முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய முன்னோடி. இந்திய அளவில் சாதிகடந்த பூசைமுறையை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.நாராயண குருவின் வழிவந்தவர்.

பிறப்பு, கல்வி

ஸ்ரீதரன் தந்திரி நூறாண்டுகளுக்கு முன் ஆலயநுழைவு மறுக்கப்பட்ட ஈழவச் சாதியைச் சேர்ந்தவர். கெடாமங்கலம் களவம்பாற வீட்டில் மாமன் வைத்தியருக்கும் எடவனக்காடு கடயந்தரவீட்டில் பார்வதியம்மாவுக்கும் மகனாக 1925ல் பிறந்தார். அடிப்படைக் கல்விக்குப்பின்னர் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளிடமிருந்தே வேதங்களையும் சம்ஸ்கிருதத்தையும் தந்திரவிதிகளையும் கற்றுத்தேர்ந்தார். சோதிடம், புரோகிதச்சடங்குகள், ஆலயச்சடங்குகள் செய்வதில் பெருமதிப்புக்குரியவராக கருதப்பட்டார்

மதப்பணி

ஸ்ரீதரன் தந்திரி இருநூற்று எட்டு புதுஆலயங்களில் இறைநிறுவல் சடங்குகளை [தேவப்பிரதிஷ்ட்டை] செய்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக கேரளத்தின் முதன்மையான பேராலயங்களில் தந்திரியாகவும் தலைமைத்தந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார்.  தேவயக்ஞபத்ததி, பித்ருகர்மவிதி, குருசிஷ்யசம்வாதம் உட்பட கேரளத்தில் பயிலப்படும் முதன்மையான தந்திரநெறி சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

அவருடைய ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயம் தலித்துக்கள் உட்பட அனைவருக்கும் அக்கல்வியை வழங்குகிறது. அவருடைய மைந்தர் பரவூர் ராகேஷ் தந்திரிகள் இன்று பெரும்புகழ்கொண்ட தாந்திரிக, வேத ஆசிரியராக அறியப்படுகிறார். பரவூர் ராகேஷ் தந்திரிகள் சபரிமலையிலும் தந்திரியாக முன்னரே பணியாற்றியிருக்கிறார்

மறைவு

2011ல் மறைந்தார்.

நூல்கள்

தேவயக்ஞபத்ததி,

பித்ருகர்மவிதி

குருசிஷ்யசம்வாதம்