being created

பரணீதரன்

From Tamil Wiki
Revision as of 11:26, 11 July 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பரணீதரன்

ஆன்மிக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் பரணீதரன் (டி.எஸ். ஸ்ரீதர் : 1925-2020) ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ‘அருணாசல மகிமை’ தொடர், பலரை ஆன்மிக வாசிப்பு நோக்கி ஈர்த்த தொடராகும். மகான்கள் பலரைப் பற்றி பல நூல்களைப் படைத்தவர்.

பிறப்பு, கல்வி

பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், டி.என்.சேஷாசலம்-ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் சிறந்த தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், ‘கலாநிலையம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய தந்தை சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார்.

வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தின் பாலும் நாடகத்தின் பாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார் பரணீதரன்.

கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.கா.ம் படிப்பை நிறைவு செய்தார்

தனி வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.