பன்னிரு திருமுறை
From Tamil Wiki
Revision as of 17:12, 23 April 2022 by Logamadevi (talk | contribs)
பன்னிரு திருமுறை (பொ.யு. 10-ஆம் நூற்றாண்டு) பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பு.
திருமுறைத் தொகுப்பு
சிவபெருமானை தெய்வமாகப் போற்றும் சைவ சமயத்தில் சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்கு அதன் அடியார்கள் சிவாலயங்கள் தோறும் சென்று பக்திப் பாடல்களைப் பாடினர். இப்பாடல்களை இராஜராஜனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்பட்டது.
பன்னிரு திருமுறைகள்
திருஞானசம்பந்தர்
- முதல் திருமுறை
- இரண்டாம் திருமுறை
- மூன்றாம் திருமுறை மற்றும் பிற்சேர்க்கை பாடல்கள்
திருநாவுக்கரசர்
- நான்காம் திருமுறை
- ஐந்தாம் திருமுறை
- ஆறாம் திருமுறை
சுந்தரமூர்த்தி
- ஏழாம் திருமுறை
மாணிக்கவாசகர்
- எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார்
ஒன்பது அருளாளர்கள்
- ஒன்பதாம் திருமுறை - திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அடியார்கள் இயற்றிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
திருமூலர்
- பத்தாம் திருமுறை - திருமந்திரம்
பன்னிரு அருளாளர்கள்
- பதினோராம் திருமுறை - திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அடியார்கள் இயற்றிய
சேக்கிழார்
- பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.
உசாத்துணை
- பன்னிரு திருமுறை - சைவ இலக்கியங்கள் - சமய இலக்கியங்கள் (tamilsurangam.in)
- தமிழ் சைவ சமய - அறிமுகமும் வரலாறும் (ilakkiyatamilan.xyz)
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.