under review

நெல்லைநாத முதலியார்

From Tamil Wiki
Revision as of 16:00, 29 November 2022 by Ramya (talk | contribs) (Created page with "நெல்லைநாத முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாயில் இருபாலை என்னும் ஊரில் பிறந்தார். கூழங்கை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நெல்லைநாத முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாயில் இருபாலை என்னும் ஊரில் பிறந்தார். கூழங்கைத் தம்பிரானிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். சேனதிராய முதலியார் இவரின் மகன். திருக்கோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயிலில் அர்ச்சகராய் இருந்தார். வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை உடையவர். மயில்வாகணப்புலவரின் மாணவர்.

இலக்கிய வாழ்க்கை

நெல்லைநாத முதலியார் கவிதைகள் பல இயற்றினார். நெல்லைநாத முதலியார் இயற்றிய தனிநிலைச் செய்யுள்களும் பிறநூல்களும் இப்போது கிடைக்கவில்லை. 1928இல் தக்ஷிண கைலாச புராணம் எனப்படும் கோணாசல புராணத்தை எழுதினார். இந்நூலின் குருவணக்கப்பகுதியில் மயில்வாகனப் புலவரைக் குறிப்பிட்டு எழுதினார். நெல்லைநாத முதலியாரின் இல்லத்தில் புலவர்களும் நூலாசிரியர்களும் சென்று தமது நூல்களை இவர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தனர்.

நூல் பட்டியல்

  • தக்ஷிண கைலாச புராணம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.