நரன்
நரன் (பிறப்பு: 1981) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். பதிப்பாளர், இதழாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
நரன் 1981-ல் விருதுநகரில் பிறந்தார். வணிகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
நரன் 2002 முதல் எழுதி வருகிறார். நரனின் முதல் கவிதைத் தொகுப்பு “உப்பு நீர் முதலை” என்ற 2010-ல் காலச்சுவடு பதிப்பாக வெளியானது. விகடனில் ’வேட்டை நாய்கள்’ என்ற தொடரை எழுதினார். நான்கு கவிதைத் தொகுப்புகளும், மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. ”361 டிகிரி” என்ற இதழின் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் படைப்புகளை அடையாளம் காணும் நோக்கில் சால்ட் பதிப்பகத்தை நிறுவினார்.
இலக்கிய இடம்
”சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், ஃபேன்டசி, ஜென் எனப் பல தளங்களில் இயங்கக்கூடிய கவிதைகளை எழுதுபவர். நிறங்கள், எண்கள், வாசனைகள், வடிவங்கள் போன்றவை இடம்பெறும் இவரது கவிதைகள் பிற கவிஞர்களிடமிருந்து தனித்துவிளங்குபவை. கதைகள் முழுக்க காட்சிகளாகவும், கவிதைகள் ரூபம் அரூபம் என இரண்டும் ஒருசேர அமைந்ததாகும்” என நரனின் கவிதைகள் பற்றி பச்சோந்தி மதிப்பிடுகிறார்.
விருதுகள்
- சிறந்த சிறுகதைகளுக்கான விகடன் விருது
- வாசகசாலை விருது, சுஜாதா விருது
- எழுத்தாளர் க.சி.சிவக்குமார் நினைவு விருது
- பாலகுமாரன் இலக்கிய விருது
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- உப்பு நீர் முதலை
- ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
- லாகிரி
- மிளகு பருத்தி மற்றும் யானைகள்
சிறுகதைகள்
- கேசம்
- சரீரம்
- பராரி (ஏழு கடல், ஏழு மலை)
இணைப்புகள்
- ‘I believe in being the fringe. It helps keep my poetry alive’: How Naran is redefining Tamil poetry: Kavitha Muralidharan
- தூக்கம் பறித்த ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்: யோகி: வல்லினம்
- என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன் - எழுத்தாளர் நரன் - விகடன்
- சிறந்த சிறுகதைத் தொகுப்பு - சரீரம் | வாசகசாலை | தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.