நரன்
From Tamil Wiki
நரன் (பிறப்பு: 1981) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். பதிப்பாளர், இதழாசிரியர்.
பிறப்பு, கல்வி
நரன் விருதுநகரில் பிறந்தார். வணிகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.
இதழியல்
”361 டிகிரி” என்ற இதழின் ஆசிரியர்.
பதிப்பகம்
சால்ட் பதிப்பகத்தின் நிறுவனர்.
இலக்கிய வாழ்க்கை
2002 முதல் சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும், இரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. நரனின் முதல் கவிதைத் தொகுப்பு “உப்பு நீர் முதலை” என்ற 2010-ல் காலச்சுவடு பதிப்பாக வெளியானது. விகடனில் ’வேட்டை நாய்கள்’ என்ற தொடரை எழுதிவருகிறார்.
விருதுகள்
- சிறந்த சிறுகதைகளுக்கான விகடன் விருது
- வாசகசாலை விருது, சுஜாதா விருது
- எழுத்தாளர் க.சி.சிவக்குமார் நினைவு விருது
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- உப்பு நீர் முதலை
- ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
- லாகிரி
- மிளகு பருத்தி மற்றும் யானைகள்
சிறுகதைகள்
- கேசம்
- சரீரம்
- பராரி (ஏழு கடல், ஏழு மலை)
இணைப்புகள்
- ‘I believe in being the fringe. It helps keep my poetry alive’: How Naran is redefining Tamil poetry: Kavitha Muralidharan
- தூக்கம் பறித்த ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்: யோகி: வல்லினம்
- என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன் - எழுத்தாளர் நரன் - விகடன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.