நடராசையர்

From Tamil Wiki

நடராசையர் (1844 - 1905) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நடராசையர் இலங்கை யாழ்ப்பாணம், இணுவில்லில் பிறந்தார். ஆறுமுகநாவலரவரிடம் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த சாஸ்திரங்களையும் பயின்றார். சமஸ்கிருதத்திலும் புலமை உடையவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

நடராசையர் தனிப்பாடல்கள் பல பாடினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டார்.

மறைவு

நடராசையர் 1905இல் காலமானார்.

நூல் பட்டியல்

பதிப்பித்த நூல்கள்
  • சிவஞான சித்தியார் சுபக்கம்
  • ஞானப்பிரகாசர் உரை

உசாத்துணை