திருவாவடுதுறை கக்காயி நடராஜசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 23:59, 17 March 2022 by Subhasrees (talk | contribs) (திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை (1912-1956) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையின் மூத்த சகோதரி தயாளம்மாள் என்பவருக்கு ஏப்ரல் 27, 1912 அன்று நடராஜசுந்தரம் பிள்ளை பிறந்தார். வீட்டில் தாயும் மாமாவும் அழைத்த ‘கக்காயி’ என்ற செல்லப் பெயர் நிலைத்துவிட்டது.

நடராஜசுந்தரம் பிள்ளை தயாளம்மாளிடம் வாய்ப்பாட்டும் தாய்மாமா ராஜரத்தினம் பிள்ளையிடம் நாதஸ்வரமும் கற்றார்.

தனிவாழ்க்கை

நடராஜசுந்தரம் பிள்ளை ஸ்வாமிமலை வேணுப்பிள்ளையின் மகள் கமலாவை மணந்தார்.

இசைப்பணி

நடராஜசுந்தரம் பிள்ளை 1930ஆம் ஆண்டு ராஜரத்தினம் பிள்ளையுடன் இணைந்து கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனியாக குழு அமைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். நடராஜசுந்தரம் பிள்ளை வாய்ப்பாட்டுக் கச்சேரிகளும் செய்திருக்கிறார்.

மறைவு

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013