தா. சின்னத்தம்பி உபாத்தியாயர்
From Tamil Wiki
தா. சின்னத்தம்பி உபாத்தியாயர் (1830-1878) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
தா. சின்னத்தம்பி உபாத்தியாயர் இலங்கை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, தனக்காரக் குறிச்சியில், தாமோதரம் பிள்ளைக்கு மகனாக 1830இல் பிறந்தார். தியாகராச பண்டிதரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கணித ஜோதிட சாஸ்திரங்களில் அறிவும் பயிற்சியும் பெற்றார். தன் ஊரில் ஒரு தமிழ்ப் பாடசாலையை நிறுவி, அரசின் உதவிப் பணம் பெற்று அப்பாடசாலையில் ஆசிரியராக இருந்து அதனை நடத்தினார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
இலக்கிய வாழ்க்கை
தா. சின்னத்தம்பி உபாத்தியாயர் கணிதம் ஜோதிடவியல் சார்ந்த நூல்களை எழுதினார்.
மறைவு
தா. சின்னத்தம்பி உபாத்தியாயர் 1878இல் காலமானார்.
நூல் பட்டியல்
- நில அளவைச் சூத்திரம்
- சோதிடச் சுருக்கம்
- மதனவல்லி விலாசம்
- இராம விலாசம்
- சிவதோத்திரக் கீர்த்தனை
- புதுச்சந்நிதி முருகன் பதிகம்
- விக்கி னேசுவரர் பதிகம்
- வீரபத்திரர் ஊஞ்சல்
- வீர மாகாளியம்மன் பதிகம்
- வீரபத்திரர் சதகம்
- வீரபத்திரர் பதிகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.