தமிழகத்தில் அகத்தியர்: Difference between revisions
No edit summary |
Manobharathi (talk | contribs) |
||
Line 3: | Line 3: | ||
தமிழகத்தில் அகத்தியர் ( Agastya in the Tamil land) (1920) கே.என்.சிவராஜ பிள்ளை எழுதிய ஆங்கில ஆய்வுநூல். இந்நூலில் அகத்தியர் என்னும் தொன்மம் எப்படி இந்தியப்புராணங்களில் கையாளப்பட்டுள்ளது, எவ்வண்ணம் தமிழில் அது அமைந்துள்ளது என்று ஆராய்கிறார். அகத்தியர் பற்றிய முழுமையான ஆய்வுநூலாகவும், வரலாற்றுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாட்டின் மேல் வெளிச்சம் வீசும் ஆய்வாகவும் இந்நூல் கருதப்படுகிறது | தமிழகத்தில் அகத்தியர் ( Agastya in the Tamil land) (1920) கே.என்.சிவராஜ பிள்ளை எழுதிய ஆங்கில ஆய்வுநூல். இந்நூலில் அகத்தியர் என்னும் தொன்மம் எப்படி இந்தியப்புராணங்களில் கையாளப்பட்டுள்ளது, எவ்வண்ணம் தமிழில் அது அமைந்துள்ளது என்று ஆராய்கிறார். அகத்தியர் பற்றிய முழுமையான ஆய்வுநூலாகவும், வரலாற்றுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாட்டின் மேல் வெளிச்சம் வீசும் ஆய்வாகவும் இந்நூல் கருதப்படுகிறது | ||
== எழுத்து வெளியீடு == | == எழுத்து வெளியீடு == | ||
[[கே.என். சிவராஜ பிள்ளை]] இந்நூலை | [[கே.என். சிவராஜ பிள்ளை]] இந்நூலை 1930-ல் ஆங்கிலத்தில் எழுதினார். இதன் தமிழ் மொழியாக்கம் வெளிவரவில்லை | ||
== ஆய்வுப்புலம் == | == ஆய்வுப்புலம் == | ||
கே.என்.சிவராஜ பிள்ளை இந்நூலில் மேற்கோள் காட்டும் நூல்கள் | கே.என்.சிவராஜ பிள்ளை இந்நூலில் மேற்கோள் காட்டும் நூல்கள் | ||
Line 66: | Line 66: | ||
*[https://openlibrary.org/works/OL1145071W/Agastya_in_the_Tamil_land கே.என்.சிவராஜ பிள்ளை Agastya in the Tamil land இணையநூலகம்] | *[https://openlibrary.org/works/OL1145071W/Agastya_in_the_Tamil_land கே.என்.சிவராஜ பிள்ளை Agastya in the Tamil land இணையநூலகம்] | ||
*[https://archive.org/details/agastyaintamilla00sivarich இணையநூலகம் Agastya in the Tamil land] | *[https://archive.org/details/agastyaintamilla00sivarich இணையநூலகம் Agastya in the Tamil land] | ||
{{finalised}} | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:25, 17 August 2022
தமிழகத்தில் அகத்தியர் ( Agastya in the Tamil land) (1920) கே.என்.சிவராஜ பிள்ளை எழுதிய ஆங்கில ஆய்வுநூல். இந்நூலில் அகத்தியர் என்னும் தொன்மம் எப்படி இந்தியப்புராணங்களில் கையாளப்பட்டுள்ளது, எவ்வண்ணம் தமிழில் அது அமைந்துள்ளது என்று ஆராய்கிறார். அகத்தியர் பற்றிய முழுமையான ஆய்வுநூலாகவும், வரலாற்றுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாட்டின் மேல் வெளிச்சம் வீசும் ஆய்வாகவும் இந்நூல் கருதப்படுகிறது
எழுத்து வெளியீடு
கே.என். சிவராஜ பிள்ளை இந்நூலை 1930-ல் ஆங்கிலத்தில் எழுதினார். இதன் தமிழ் மொழியாக்கம் வெளிவரவில்லை
ஆய்வுப்புலம்
கே.என்.சிவராஜ பிள்ளை இந்நூலில் மேற்கோள் காட்டும் நூல்கள்
- வேதங்கள்
- ஐதரேய பிராமணம்
- மதுரைக்காஞ்சி
- புறநானூறு
- வீரசோழியம்
- தேவாரம்
- திருவிளையாடற் புராணம்
- காஞ்சி புராணம்
- சீகாளத்தி புராணம்
- தாண்டவராய சுவாமிகளின் பாடல்கள்,
- தொல்காப்பியம்
- அகத்தியர் வைத்திய நூறு
- அகத்தியர் வைத்தியம் பதினாறு
- அகத்தியர் எட்டு
- அகத்தியர் பூரண சூத்திரம் இருநூற்றுப் பதினாறு
- அகத்தியர் கலைஞான சூத்திரம் ஆயிரத்து இருநூறு
- அகத்தியர் சூத்திரம் இருநூற்றுப் பத்து
- அகத்தியர் தீக்ஷாவிதி
- பேரகத்தியம்
- சீவக சிந்தாமணி
- சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை)
- புறப்பொருள் வெண்பா மாலை
- திவாகரம்
- அகப்பொருள் விளக்கம்
- மாக்ஸ் முல்லரின் ‘History of Ancient Sanskrit Literature’
- பண்டார்கரின் ‘Early History of Deccan’
- மெக்டோனிலின் ‘History of Sanskrit Literature’.
நூல் அமைப்பு
தமிழகத்தில் அகத்தியர் என்னும் நூல் பின்வரும் உட்தலைப்புகளைக் கொண்டமைகின்றது.
- 1. முன்னுரை
- 2. தமிழகத்தில் அகத்தியர் மரபு - பொதுமை, அகத்தியர் பிறப்பு
- 3. தொடக்க காலத் தொன்மக்கதைகள்
- 4. பிரதிபலிப்புகள் (Reflections)
- 5. தென்பகுதியில் அகத்தியரது யாத்திராகமம்
- 6. மரபின் மதிப்பீடு
- 7. பாரம்பரியத்தின் தென்மை (Antiquity of Tradition)
- 8. தமிழகத்தில் அகத்தியர் (Agastya in the Tamil Country)
- 9. அகத்தியர் மரபும் அவருக்குப் பிந்திய மரபும்
- 10. அகத்தியர் மரபு - ஜைன மதத்தின் தோற்றம்
- 11. அகத்திய மரபு ஏற்றுக் கொள்வதற்கான காரணங்கள்
- 12. இராமாயணத்தில் அகத்தியர் மரபு
- 13. அகத்திய மரபும் தொல்காப்பியமும்
- 14. அகத்தியரின் படைப்புகள்
- 15. அகத்தியச் சூத்திரங்களும் தொல்காப்பியமும்
- 16. அகத்தியச் சூத்திரங்கள் - ஒரு மோசடி
- 17. பிற்காலத்தமிழ் இலக்கியத்தில் அகத்தியர் மரபு
- 18. தமிழ்ப்புராண இலக்கியத்தில் அகத்தியர் மரபு
- 19. அகத்தியரைத் தெய்வநிலைக்கு உயர்த்துதல்
- 20. நிகழ்வதற்கரிய உள்ளார்ந்த நிலையை அடைதல்
- 21. அகத்தியர் - ஒரு தனிப்பட்ட வரலாறு
- 22. அகத்தியர் - ஒரு பாதி வரலாற்று நபர்
- 23. அகத்தியர் - உருவகத் தனமை கொண்ட பாத்திரம்
- 24. முடிவுரை
நூல்முடிவுகள்
தொல்காப்பியர் அகத்தியரைப் பற்றிச் சொல்லவில்லை என்று வகுக்கும் கே.என்.சிவராஜ பிள்ளை அகத்தியர் என்னும் தொன்மம் வைதிகப் பண்பாட்டில் இருந்து கீழைநாடுகள் முழுக்க பரவியது என்றும், தமிழகத்திற்கு அவ்வண்ணம் பிற்காலத்தில் வந்து சேர்ந்த ஒன்று என்றும் கூறுகிறார்.
உசாத்துணை
இணைப்பு
✅Finalised Page