டி. என். ராஜரத்தினம் பிள்ளை
From Tamil Wiki
டி. என். ராஜரத்தினம் பிள்ளை (திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை) (ஆகஸ்ட் 27, 1898 - டிசம்பர் 12, 1956) புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர். தோடி ராகம் மிகச்சிறப்பாக வாசித்ததால் தோடி ராஜரத்தினம் என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுபவர்.
இளமை, கல்வி
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் என்னும் ஊரில் குப்புசாமிப் பிள்ளை - கோவிந்தம்மாள் மகனாக ஆகஸ்ட் 27, 1898 அன்று பிறந்தார். தந்தை குப்புசாமிப் பிள்ளையிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
திருமருகல் நடேசபிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞக்கு வளர்ப்பு மகனாகி திருமருகல் நடேசபிள்ளை ராஜரத்தினம் (டி. என். ராஜரத்தினம்) ஆனார்.
நடேசபிள்ளை திருவாவடுதுறை ஆதினத்தின் இசைக்கலைஞராக இருந்தவர்.