டமாரம்
From Tamil Wiki
டமாரம் (1948) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள் )
வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பாலர் மலர் இதழை நடத்திய வெ.சுப.நடேசன் டமாரம் இதழையும் நடத்தினார். இதற்கு ஆசிரியராக அழ.வள்ளியப்பா இருந்தார். பாலர் மலர், டமாரம், சங்கு மூன்றும் ஒரே பதிப்பக வெளியீடுகள். மூன்றுக்கும் அழ.வள்ளியப்பாவே ஆசிரியர்.
உள்ளடக்கம்
‘டமாரம்’ குழந்தைகளின் படைப்புகளுக்கு அதிக இடமளித்தது. அதன் விற்பனை 20,000 பிரதி களுக்கு மேலாக இருந்தது. வாரம் இருமுறை வெளி வந்த டமாரத்தின் விலை காலணா
உசாத்துணை
✅Finalised Page