ஞா. குருசாமி

From Tamil Wiki
Revision as of 07:48, 6 February 2024 by Kaliprasadh (talk | contribs) (ஆய்வு)

ஞா.குருசாமி (மே 05, 1983) தமிழ் இலக்கிய ஆய்வாளர். மாற்றுச் சிந்தனையைச் சார்ந்து இலக்கியம், இலக்கணம், சமுதாயம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார்.

ஞா. குருசாமி

பிறப்பு, கல்வி

ஞா.குருசாமி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரம் என்கிற கிராமத்தில் திரு. கு.ஞானப்பிரகாசம், திருமதி. ம.அருளாயி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.

தனது தொடக்கக் கல்வியை தைலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் இடைநிலைக்கல்வியை தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கற்றார்.

மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் இளம் இலக்கியமும் (பி.லிட்), மதுரை, மதுரைக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியமும் நிறைவு செய்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

இவரது மனைவி பெயர் அர்ச்சனா பிரித்தா. இவர்களுக்கு பிப்ரவரி 17, 2012 -ல் திருமணம் நிகழ்ந்தது. இந்த இணையருக்கு அஷிரா ஜியோனா என்கிற ஒரு மகள் இருக்கிறார்

ஞா. குருசாமி, தற்போது மதுரை மாவட்டத்தில் கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஞா. குருசாமி மாணவப் பருவத்தில் கவிதைகள் எழுதினார். இவர் எழுதிய 'மனதில் மணக்கும் மலர்’ என்னும் ஈற்றடியால் அமைந்த வெண்பா 'மீண்டும் கவிக்கொண்டல்' பத்திரிகையில் 2001 இல் வெளியானது. இது தான் பத்திரிகையில் வெளியான முதல் படைப்பு. அதைத்தொடர்ந்து வெகுஜன இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் வெளியாகின. இலக்கியச் சிற்றிதழான ’உயிர் எழுத்து’ வாயிலாக இலக்கிய அறிமுகம் கிடைக்கப் பெற்றார். அதன் பின்னர் 2010 இல் உயிர் எழுத்தில் இவருடைய கவிதைகள் வெளியாயின.

எழுத்தாளர் பாமா, டேனியல் முதலியோரது எழுத்துகள் வாயிலாக இலக்கியங்களை புதிய கோணத்தில் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் துவங்கினார். ஆய்வாளர் ராஜ் கெளதமன் அவர்களின் விமர்சன அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டு இலக்கிய, சமூகவியல் ஆய்விற்குள் வந்தார். ஆய்வுகளில் கவனம் செலுத்துவதில் விருப்பம் உடையவரானார்.

அவரது முதல் ஆய்வுக் கட்டுரையும் உயிர் எழுத்தில் தான் வெளியானது. அதற்குப் பிறகு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, இந்து தமிழ்த்திசை, மானுடம், காக்கைச் சிறகினிலே, தமிழ்த்தடம், நீலம் முதலிய பத்திரிகைகளிலும், கீற்று உள்ளிட்ட இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியாகின. நானூறுக்கும் மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார்.

13.01.2004 அன்று தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியில் ஞா.குருசாமி முதலிடம் பெற்றமை.

ஆய்வுப் பணிகள்