ஞானி

From Tamil Wiki
Revision as of 18:09, 14 February 2022 by Jeyamohan (talk | contribs)
ஞானி

ஞானி ( 1 ஜூலை 1935 ஜூலை 22, 2020) கோவை ஞானி (கி.பழனிச்சாமி) தமிழில் செயல்பட்ட இலக்கிய ஆய்வாளர், இதழாளர், மார்க்ஸியச் சிந்தனையாளர். வானம்பாடி இயக்கத்தின் கோட்பாட்டாளார். புதிய தலைமுறை, நிகழ் , தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நடத்தியவர். மார்க்ஸியக் கோணத்தில் இலக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர்.பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர்.

பிறப்பு,கல்வி

கி. பழனிச்சாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஞானி கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.

அரசியல் வாழ்க்கை

ஞானி கல்லூரி நாட்களில் தமிழியக்கத்தின் ஆதரவாளர் ஆனார். திராவிட இயக்கச்சார்பும் பெரியாரியம் சார்ந்த ஈடுபாடும் உருவானது. பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர் ஆனார். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளில் பங்கேற்றார். 1966ல் மார்க்ஸிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜன் தொடர்பு கிடைத்தது. கட்சிசார்பான மார்க்ஸியத்தின் விமர்சகராக ஆனார். இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் (நக்சலைட் இயக்கம்) அவரை கவர்ந்தது.

எஸ்.என்.நாகராஜனின் தொடர்பால் ஞானி மார்க்ஸியம் சார்ந்த சமூக மாற்றம் என்பது பண்பாட்டு அடிப்படைகளில் உருவாகும் வளர்ச்சிமாற்றம் வழியாகவே நிகழமுடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். அதற்கு தத்துவக் கல்வியும், கலையிலக்கியங்களில் மாற்றுச்சிந்தனையும் உருவாகவேண்டும் என எண்ணினார். அதன்பொருட்டு புதிய தலைமுறை என்னும் கோட்பாட்டு இதழை எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து நடத்தினார். வானம்பாடி இலக்கிய இதழ், நிகழ் கலையிலக்கிய இதழ் ஆகியவற்றை நடத்தினார்

1992ல் சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின் ஞானியின் அரசியல் பார்வையில் பெரும் மாற்றம் உருவானது. மார்க்சிய விடுதலை என்பது தேசிய இனங்களின் விடுதலையின் வழியாகவே அடையப்பட முடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். டிஅயஆஸியணாஇந்துஜௌயும், பின்னர் வானம்பாடிநிக

ஞானி எஸ்.என்நாகராஜன்

மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம்/மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.