first review completed

ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையில் சர்.எஸ்.சுப்ரமணிய ஐயரின் கீழ் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினார். பின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக 1893ல் பதவியேற்றார். இருபதாண்டுகள் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றினார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யப்பட்டார். ஆகவே 1912ல் பதவியை உதறிவிட்டு மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையில் சர்.எஸ்.சுப்ரமணிய ஐயரின் கீழ் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினார். பின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக 1893ல் பதவியேற்றார். இருபதாண்டுகள் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றினார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யப்பட்டார். ஆகவே 1912ல் பதவியை உதறிவிட்டு மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.


ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை 1884ல் தன் உறவினர் பரசுராம பிள்ளையின் மகள் லட்சுமியம்மாளை மணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தில் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார்.
ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை 1884ல் தன் உறவினர் பரசுராம பிள்ளையின் மகள் லட்சுமியம்மாளை மணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தில் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஜே.எம். சோமசுந்தரம் அறநிலையத்துறையில் துணை ஆணையராக இருந்து ஓய்வு பெற்றபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் இருந்தார். கோவில் வரலாறு, சிற்பங்கள் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை (சோழர்காலக் கோவில் பணிகள், Tiruchendoor Temple).
1887இல் நல்லுசாமி தன் 23வது வயதில் வக்கீல் தொழில் ஆரம்பித்ததில் இருந்து தம் இறுதிக்காலம் வரை 33 ஆண்டுகளாகத் தம் வருமானத்தின் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கும் பத்திரிகைகளை அச்சிடுவதற்கும் செலவிட்டிருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரு சிறு பத்திரிக்கைகள் நடத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்கள், சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கடிதங்கள் மூலமாக பிற அறிஞர்களுடன் இவர் விவாதங்கள் தொகுக்கப்பட வேண்டியவை. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர்.


அவருக்குச் சொந்தமான நல்ல நூலகம் இருந்தது. Encyclopaedia Brittanica வின் 25 தொகுதிகள் இவரிடம் இருந்தன. The Person, The Windsor, Temple Bar, The Chamber's Journal போன்ற பத்திரிகைகளைத் தம் சொந்த நூலகத்துக்கு வாங்கியிருக்கிறார். என் நூலகம் படிப்பவருக்கு எப்போதும் திறந்திருக்கும் என்று அடிக்கடிக் கூறுவாராம்.
அவருக்குச் சொந்தமான நூலகம் இருந்தது. Encyclopaedia Brittanica வின் 25 தொகுதிகள் இவரிடம் இருந்தன. The Person, The Windsor, Temple Bar, The Chamber's Journal போன்ற பத்திரிகைகளைத் தம் சொந்த நூலகத்துக்கு வாங்கியிருக்கிறார்.


1887இல் நல்லுசாமி தன் 23வது வயதில் வக்கீல் தொழில் ஆரம்பித்ததில் இருந்து தம் இறுதிக்காலம் வரை 33 ஆண்டுகளாகத் தம் வருமானத்தின் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கும் பத்திரிகைகளை அச்சிடுவதற்கும் செலவிட்டிருக்கிறார். அவர் சைவசித்தாந்தத புத்தகங்களைத் தம் சொந்தச் செலவில் ஐரோப்பியர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்.
=== கட்டுரைகள் ===
நல்லுசாமி, அவரது சமகாலத்தில் பரவலாக அறியப்பட்டிருந்த செந்தமிழ், Tamilian Antiquary, Madras Review, The New Reformer போன்ற பத்திரிகைகளில் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
 
=== கடிதங்கள் ===
ஆனந்த குமாரசாமி 'சிவானந்த நடனம்' (Dance of Siva) என்ற நூல் எழுதியபோது ஏற்பட்ட சந்தேகங்களுக்காக நல்லுசாமிப் பிள்ளைக்கு எழுதிய கடிதங்களைத் தொகுக்கும் முயற்சி, நல்லுசாமியின் கடைசிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுப் பாதியில் நின்றிருக்கிறது. அந்தக் கடிதங்களில், நடராஜ தத்துவம் சிவவழிபாடு, சிற்பங்கள் பற்றி நல்லுசாமியும் ஆனந்த குமாரசாமியும் விவாதித்த செய்திகள் உள்ளன என்று அ.கா. பெருமாள் தன் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
 
== இதழாளார் ==
சைவ சமயம் தொடர்பாக உண்மைநெறி விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்னும் தலைப்பில் தமிழிலும், 1897இல் Light of Truth or Siddhanta Deepika என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளை வெளியிட்டார்.
 
தமிழ்ப் பத்திரிகை ஒரு வருடம் வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகை 14 வருடங்கள் தொடர்ந்து வந்தது. ஆங்கிலப் பத்திரிகையில் மெய்கண்ட சாத்திரங்களின் மொழிபெயர்ப்பு முழுவதுமாக வந்தது. இவை பற்றிய குறிப்புகளும் வந்தன. தமிழ்ப் பதிப்பில் மெய்கண்ட சாத்திரங்களின் உரையும் வந்தது. ஆங்கிலப் பத்திரிகையில் சங்க இலக்கியப் பாடல்களின் (கலித்தொகை, பத்துப்பாட்டு) மொழிபெயர்ப்புகளும் வந்தன. முக்கியமாகச் சைவ சமய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தில் சைவம், சைவ வரலாறு போன்றவை பற்றிய செய்திகளுக்கு இப்பத்திரிகை முன்னுரிமை கொடுத்தது.
1897-1911களில் ஆங்கிலப் பத்திரிகை 300 பிரதிகள் அச்சிடப்பட்டது. பெரும்பாலும் மேலை, கீழை நாடுகளும் இலவசமாக அனுப்பப்பட்டது.


== சைவ சித்தாந்தம் ==
== சைவ சித்தாந்தம் ==
அவர் எழுதிய சைவசமயம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை ஜெர்மனியில் மேக்ஸ் முல்லர், பாரிசில் ஜூலியன் வில்சன், லண்டனில் பிரூரசர், ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் ஆகியோர் படித்துவிட்டு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே சைவத்தையும் தமிழையும் பற்றி அறிய நல்லுசாமி காரணமாய் இருந்திருக்கிறார்.
அவர் எழுதிய சைவசமயம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை ஜெர்மனியில் மேக்ஸ் முல்லர், பாரிசில் ஜூலியன் வில்சன், லண்டனில் பிரூரசர், ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் ஆகியோர் படித்துவிட்டு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.  


நல்லுசாமி சைவ சித்தாந்தம் பற்றி நுட்பமாக அறிந்த தமிழறிஞர். அந்தக் காலத்தில் சைவம், சித்தாந்தம், சமய இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதினார். போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பு வந்தபோது அவர் அந்த நூலில் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கித் தமிழ் அறியாத அறிஞர்களுக்கு இலவசமாய்க் கொடுத்திருக்கிறார்.
நல்லுசாமி சைவ சித்தாந்தம் பற்றி நுட்பமாக அறிந்த தமிழறிஞர். நல்லுசாமிப்பிள்ள திருப்பத்தூரில் முன்சீப்பாக இருந்தபோது இலக்கிய சைவ, சமய ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார். 1894இல் சிவஞான போதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். 1897இல் திருவருட்பயன் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தது. சைவம், சித்தாந்தம், சமய இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார். போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பு வந்தபோது அவர் அந்த நூலில் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கித் தமிழ் அறியாத அறிஞர்களுக்கு இலவசமாய்க் கொடுத்தார்.


== வாழ்க்கை வரலாறு ==
மதுரை, திருச்சி, தூத்துக்குடி நகரங்களில் தொடர்ந்து நடந்த சைவ மாநாடுகளுக்கு நல்லுசாமியை அழைத்தனர். 1907இல் கல்கத்தாவிலும், 1911 இல் அலகாபாத்திலும் நடந்த சர்வ சமயக் கூட்டங்களில் (convention of Religions) தமிழகச் சைவ சித்தாந்த வல்லுநர்களின் பிரதிநிதியாக அவர் சென்றிருக்கிறார். விவேகானந்தர் சிகாகோவிலிருந்து இந்தியா திரும்பி சென்னை ஐஸ் ஹவுசில் தங்கிய சமயத்தில் சைவசித்தாந்திகள் சார்பாக  தலைமை உறுப்பினராக அவரைச் சந்திக்கச் சென்றார். 1900இல் இலங்கை பொ. இராமநாதன், சிதம்பரத்தில் சித்தாந்த சமாஜத்தை நிறுவியபோது நடந்த முதல் மாநாட்டில்  நல்லுசாமி தலைமை தாங்கினார். இந்த சமாஜம் தமிழகத்தில் உள்ள மொத்த சைவசித்தாந்த சமாஜத்தின் தலைமைப் பதியாக இருக்க வேண்டும் என்று முதல் கூட்டத்தில் பேசினார்.
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் 'The Life and History of J.M.Nalluswami Pillai’  என்றபேரில் நூலாக்கியிருக்கிறார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
1913-1920களில் நல்லுசாமி மதுரையில் வக்கீல் தொழில் செய்த காலங்களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார். அப்போது மதுரை நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இச்சமயங்களில் சென்னை, பம்பாய், அலகாபாத் நகரங்களில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். இதே சமயத்தில் சென்னை ஆளுநர் ஆம்ச் என்பவருக்குச் சைவசித்தாந்தம் கற்பித்தார்.


==நூல்கள் பட்டியல்==
==நூல்கள் பட்டியல்==
Line 38: Line 50:
*சிவஞான போதம் ( Sivagnana Botham ) (Tamil Edition)
*சிவஞான போதம் ( Sivagnana Botham ) (Tamil Edition)
*சைவ சித்தாந்த ஆராய்ச்சி ( Saiva Siddhanta Aaraaichi ): உயிரின் தன்மை (Tamil Edition)
*சைவ சித்தாந்த ஆராய்ச்சி ( Saiva Siddhanta Aaraaichi ): உயிரின் தன்மை (Tamil Edition)
=== வாழ்க்கை வரலாற்று நூல் ===
ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் 'The Life and History of J.M.Nalluswami Pillai’  என்றபேரில் நூலாக்கியிருக்கிறார்.


== இறப்புக்காலம் ==
== இறப்புக்காலம் ==

Revision as of 05:21, 30 January 2022


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை

ஜே. எம். நல்லுச்சாமிப்பிள்ளை [ஜே.எம்.நல்லசாமி பிள்ளை] (1864-1920) சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர், இதழாளர், சொற்பொழிவாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சைவ மீட்பு இயக்கத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். மாவட்ட நீதிபதியாகப் பணிபுரிந்தார்.

பிறப்பு, கல்வி

ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை திருச்சியில் நவம்பர் 24, 1864ஆம் ஆண்டு மாணிக்கம்பிள்ளைக்கும் செல்லத்தம்மைக்கும் மூன்றாம் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மாவட்ட காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். நல்லுசாமிப் பிள்ளையின் முன்னோர்கள் எப்போதும் காஞ்சி குடிவகையினர் (ஜனவி குலத்தினர்) என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள காஞ்சி காமாட்சி கோவிலின் மரபுவழி உரிமை அவர்களுக்கு உரியது.

திருச்சி எஸ்.பி.ஜி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்து 1884இல் பி.ஏ பட்டம் பெற்றார். 1886இல் பி.எல் பட்டமும் பெற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவராக இருந்த நல்லுச்சாமிப்பிள்ளை முதலிடத்திலேயே வெற்றிபெற்று வந்தார்.அவருடைய இரு ஆசிரியர்கள் டாக்டர் டி.டங்கன், திரு பில்டர்பெக் ஆகியோர் அவரைப்பற்றி மிக உயர்ந்த மேதமையை வெளிப்படுத்தும் மாணவன் என பதிவுசெய்திருக்கிறார்கள். கல்லூரியில் தத்துவம், தர்க்கவியல், வரலாறு ஆகியவற்றை முதன்மைப்பாடங்களாகக் கற்றார்.

தனிவாழ்க்கை

1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையில் சர்.எஸ்.சுப்ரமணிய ஐயரின் கீழ் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினார். பின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக 1893ல் பதவியேற்றார். இருபதாண்டுகள் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றினார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யப்பட்டார். ஆகவே 1912ல் பதவியை உதறிவிட்டு மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை 1884ல் தன் உறவினர் பரசுராம பிள்ளையின் மகள் லட்சுமியம்மாளை மணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தில் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

1887இல் நல்லுசாமி தன் 23வது வயதில் வக்கீல் தொழில் ஆரம்பித்ததில் இருந்து தம் இறுதிக்காலம் வரை 33 ஆண்டுகளாகத் தம் வருமானத்தின் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கும் பத்திரிகைகளை அச்சிடுவதற்கும் செலவிட்டிருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரு சிறு பத்திரிக்கைகள் நடத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்கள், சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கடிதங்கள் மூலமாக பிற அறிஞர்களுடன் இவர் விவாதங்கள் தொகுக்கப்பட வேண்டியவை. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர்.

அவருக்குச் சொந்தமான நூலகம் இருந்தது. Encyclopaedia Brittanica வின் 25 தொகுதிகள் இவரிடம் இருந்தன. The Person, The Windsor, Temple Bar, The Chamber's Journal போன்ற பத்திரிகைகளைத் தம் சொந்த நூலகத்துக்கு வாங்கியிருக்கிறார்.

கட்டுரைகள்

நல்லுசாமி, அவரது சமகாலத்தில் பரவலாக அறியப்பட்டிருந்த செந்தமிழ், Tamilian Antiquary, Madras Review, The New Reformer போன்ற பத்திரிகைகளில் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

கடிதங்கள்

ஆனந்த குமாரசாமி 'சிவானந்த நடனம்' (Dance of Siva) என்ற நூல் எழுதியபோது ஏற்பட்ட சந்தேகங்களுக்காக நல்லுசாமிப் பிள்ளைக்கு எழுதிய கடிதங்களைத் தொகுக்கும் முயற்சி, நல்லுசாமியின் கடைசிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுப் பாதியில் நின்றிருக்கிறது. அந்தக் கடிதங்களில், நடராஜ தத்துவம் சிவவழிபாடு, சிற்பங்கள் பற்றி நல்லுசாமியும் ஆனந்த குமாரசாமியும் விவாதித்த செய்திகள் உள்ளன என்று அ.கா. பெருமாள் தன் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இதழாளார்

சைவ சமயம் தொடர்பாக உண்மைநெறி விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்னும் தலைப்பில் தமிழிலும், 1897இல் Light of Truth or Siddhanta Deepika என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளை வெளியிட்டார்.

தமிழ்ப் பத்திரிகை ஒரு வருடம் வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகை 14 வருடங்கள் தொடர்ந்து வந்தது. ஆங்கிலப் பத்திரிகையில் மெய்கண்ட சாத்திரங்களின் மொழிபெயர்ப்பு முழுவதுமாக வந்தது. இவை பற்றிய குறிப்புகளும் வந்தன. தமிழ்ப் பதிப்பில் மெய்கண்ட சாத்திரங்களின் உரையும் வந்தது. ஆங்கிலப் பத்திரிகையில் சங்க இலக்கியப் பாடல்களின் (கலித்தொகை, பத்துப்பாட்டு) மொழிபெயர்ப்புகளும் வந்தன. முக்கியமாகச் சைவ சமய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தில் சைவம், சைவ வரலாறு போன்றவை பற்றிய செய்திகளுக்கு இப்பத்திரிகை முன்னுரிமை கொடுத்தது. 1897-1911களில் ஆங்கிலப் பத்திரிகை 300 பிரதிகள் அச்சிடப்பட்டது. பெரும்பாலும் மேலை, கீழை நாடுகளும் இலவசமாக அனுப்பப்பட்டது.

சைவ சித்தாந்தம்

அவர் எழுதிய சைவசமயம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை ஜெர்மனியில் மேக்ஸ் முல்லர், பாரிசில் ஜூலியன் வில்சன், லண்டனில் பிரூரசர், ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் ஆகியோர் படித்துவிட்டு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.

நல்லுசாமி சைவ சித்தாந்தம் பற்றி நுட்பமாக அறிந்த தமிழறிஞர். நல்லுசாமிப்பிள்ள திருப்பத்தூரில் முன்சீப்பாக இருந்தபோது இலக்கிய சைவ, சமய ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார். 1894இல் சிவஞான போதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். 1897இல் திருவருட்பயன் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தது. சைவம், சித்தாந்தம், சமய இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார். போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பு வந்தபோது அவர் அந்த நூலில் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கித் தமிழ் அறியாத அறிஞர்களுக்கு இலவசமாய்க் கொடுத்தார்.

மதுரை, திருச்சி, தூத்துக்குடி நகரங்களில் தொடர்ந்து நடந்த சைவ மாநாடுகளுக்கு நல்லுசாமியை அழைத்தனர். 1907இல் கல்கத்தாவிலும், 1911 இல் அலகாபாத்திலும் நடந்த சர்வ சமயக் கூட்டங்களில் (convention of Religions) தமிழகச் சைவ சித்தாந்த வல்லுநர்களின் பிரதிநிதியாக அவர் சென்றிருக்கிறார். விவேகானந்தர் சிகாகோவிலிருந்து இந்தியா திரும்பி சென்னை ஐஸ் ஹவுசில் தங்கிய சமயத்தில் சைவசித்தாந்திகள் சார்பாக தலைமை உறுப்பினராக அவரைச் சந்திக்கச் சென்றார். 1900இல் இலங்கை பொ. இராமநாதன், சிதம்பரத்தில் சித்தாந்த சமாஜத்தை நிறுவியபோது நடந்த முதல் மாநாட்டில் நல்லுசாமி தலைமை தாங்கினார். இந்த சமாஜம் தமிழகத்தில் உள்ள மொத்த சைவசித்தாந்த சமாஜத்தின் தலைமைப் பதியாக இருக்க வேண்டும் என்று முதல் கூட்டத்தில் பேசினார்.

அரசியல் வாழ்க்கை

1913-1920களில் நல்லுசாமி மதுரையில் வக்கீல் தொழில் செய்த காலங்களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார். அப்போது மதுரை நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இச்சமயங்களில் சென்னை, பம்பாய், அலகாபாத் நகரங்களில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். இதே சமயத்தில் சென்னை ஆளுநர் ஆம்ச் என்பவருக்குச் சைவசித்தாந்தம் கற்பித்தார்.

நூல்கள் பட்டியல்

  • Studies in Saiva-Siddhanta. with an Introduction by V.V. Ramana Sastrin
  • Sivagnana Botham of Meykanda Deva
  • Thiruvarutpayan: of Umapathi Sivacharya by Umapathi Shivachariyar and J.M.Nallaswami Pillai
  • Ivaja Siddhiyr of Arunandi Ivchrya. Translated with Introd., Notes, Glossary Etc. by J.M. Nallaswmi Pillai
  • Pura-Porul “The Objectives” (T.A. - Vol. 1 Pt. 6): v. 2, Pt. 6by G.U. ; Nallaswami Pillai J.M. Pope
  • சிவஞான போதம் ( Sivagnana Botham ) (Tamil Edition)
  • சைவ சித்தாந்த ஆராய்ச்சி ( Saiva Siddhanta Aaraaichi ): உயிரின் தன்மை (Tamil Edition)

வாழ்க்கை வரலாற்று நூல்

ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் 'The Life and History of J.M.Nalluswami Pillai’  என்றபேரில் நூலாக்கியிருக்கிறார்.

இறப்புக்காலம்

ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை ஆகஸ்ட் 11, 1920இல் தன் ஐம்பத்தாறாம் வயதில் மதுரையில் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

உசாத்துணைகள்