ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு) என்ற இந்தப் புத்தகம் ஜனநாயகத்தைப் பற்றியும் இந்திய வாக்காளர்களின் மனநிலையைப் பற்றியும் எளிமையாக விளக்குகிறது. புதிய வாக்காளர்களுக்கு இந்தப் புத்தகம் ஜனநாயகத்தைப் பற்றிய விரிவான கையேடு. வாக்காளரிடம் இருக்கும் அறியாமையை, அலட்சியத்தை, சுயநலங்களை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. அரசியல் சாராத ஆனால், இந்திய அரசியல்வாதிகளின் மனநிலையை விவரிக்கும் முக்கியமான புத்தகம் இது.
பதிப்பு
தினமலர் நாளிதழில் 2016 சட்ட சபை தேர்தலை முன்னிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து எழுதிய நாற்பது கட்டுரைகளைத் தொகுத்து, ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளனர். இதன் முதல் பதிப்பு-2016. வெளியிட்டோர் - தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட், மதுரை.
ஆசிரியர்
இந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
நூல் சுருக்கம்
இந்த நூல் 40 கட்டுரைகளை உள்ளடக்கியது.
“வாக்களிக்கப்பதற்குப் போகும் முன் இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசித்து விட்டுச் செல்லும் ஓர் இந்திய வாக்காளர் நிச்சயம் தனக்கான ஒரு நல்ல மக்கள் சேவகரைத் தேர்ந்தெடுப்பார்” - வேலு மலையான், தர்மபுரி.
“ஜனநாயகம், அரசியல் என்கிற இந்த முகாந்திரத்தோடேயே, பொருளாதாரம், சமூகவியல், கொஞ்சம் வரலாறு என்றும் தொட்டுச் செல்வது உங்களுக்கு சுவாரசியமான வாசிப்பை உறுதிப்படுத்தும். அடிப்படைகளை, தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தும்; தெரிந்தவர்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு புத்தகம்” - ரமேஷ் வைத்யா.
உசாத்துணை
https://ashvanthashmitha.blogspot.com/2021/10/blog-post.html
https://www.dinamalar.com/news_detail.asp?id=1522223
[[Category:Tamil Content]]