ஜகன்மோகினி

From Tamil Wiki
Revision as of 23:51, 21 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜகன்மோகினி ஜகன்மோகினி (1935-1960) தமிழின் தொடக்ககால இதழ்களில் ஒன்று. நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய இதழ். பெண்கல்வி, பெண்விடுதலை ஆகியவற்றுக்காக குரல்கொடுத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜகன்மோகினி

ஜகன்மோகினி (1935-1960) தமிழின் தொடக்ககால இதழ்களில் ஒன்று. நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய இதழ். பெண்கல்வி, பெண்விடுதலை ஆகியவற்றுக்காக குரல்கொடுத்த சமூகசீர்திருத்த இதழ். வை.மு.கோதைநாயகி அம்மாளின் நாவல்கள் தொடராக வெளிவந்தன. ஏராளமான பெண் எழுத்தாளர்கள் இவ்விதழில் அறிமுகம் ஆனார்கள்.

வரலாறு

வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய முதல் நாவலான வைதேகி வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மனோரஞ்சனி இதழில் வெளிவந்து பாதியில் நிறுத்தப்பட்டது. வை.மு.கோதைநாயகி அம்மாள் நிதிச்சிக்கலால் வெளிவராமல் நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை விலை கொடுத்து வாங்கி 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளியிடத் தொடங்கினார். கோதைநாயகி அம்மாள் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு 1960 வரை 35 ஆண்டுகள் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ஜகன்மோகினி இதழ் வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய நாவல்களை தொடராக வெளியிட்டது. வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண்விடுதலை, பெண்கல்வி பற்றியும் தொடர்ந்து எழுதினார். ஏராளமான பெண் எழுத்தாளர்களை அதில் எழுதச்செய்தார். குமுதினி, குகப்பிரியை, அம்புஜம் அம்மாள் போன்று பலர் அதில் எழுதியபடி அறிமுகமானார்கள். கோதைநாயகி அம்மாள் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளர்.தேசிய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டவர். காங்கிரஸ் ஆதரவுக் கட்டுரைகளும் ஜகன்மோகினியில் வெளியாயின. வை.மு.கோதைநாயகி அம்மாளுக்கு தியோசஃபிகல் சொசைட்டியுடன் நெருக்கம் இருந்தது. தியோசஃபிகல் சொசைட்டி பற்றிய செய்திகளும் ஜகன்மோகினியில் வெளிவந்தன.

ஜகன்மோகினி

இலக்கிய இடம்

ஜகன்மோகினி தமிழில் பெண்கள் எழுதுவதற்கான களம் அமைத்து தந்தது. அரசியல் மற்றும் சமூகச்செயல்பாடுகளில் பெண்களின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அந்தக்கோணத்தில் தமிழக பெண்ணிய வரலாற்றில் ஜகன்மோகினிக்கு ஒரு முன்னோடி இடம் உண்டு.

உசாத்துணை