being created

சேந்தனார்

From Tamil Wiki
Revision as of 16:17, 14 September 2023 by Ramya (talk | contribs) (Created page with "சேந்தனார் தமிழ்ப்புலவர். திவாகரம் என்ற நிகண்டு நூலைச் செய்தவர் என சில அறிஞர்கள் கருதினர். == வாழ்க்கைக் குறிப்பு == சேந்தனார் தஞ்சாவூரைச் சேர்ந்த அரிசில் ஆற்றங்கரையிலுள்ள அம்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சேந்தனார் தமிழ்ப்புலவர். திவாகரம் என்ற நிகண்டு நூலைச் செய்தவர் என சில அறிஞர்கள் கருதினர்.

வாழ்க்கைக் குறிப்பு

சேந்தனார் தஞ்சாவூரைச் சேர்ந்த அரிசில் ஆற்றங்கரையிலுள்ள அம்பர் என்ற ஊரில் பிறந்த பிராமணர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். உபயகவி என்றழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

திவாகரம் என்னும் நிகண்டு நூலை எழுதினார். இதில் இரண்டாயிரத்து இருநூற்று எண்பத்தி ஆறு சூத்திரங்கள் உள்ளன.

விவாதம்

திவாகரம் இவர் பாடியதல்ல என்றும் திவாகரர் என்ற பெயரில் இவருக்கு மாணவர் அமைந்து அவர் பாடியிருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதினர். "செங்கதிர் வரத்திற் ருேன்றுந் திவாகரர்" என்று மண்டலபுருடர் சூடாமணி நிகண்டில் பாடியிருப்பதால் திவாகரர் என்பவர் இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதினர்.

நூல் பட்டியல்

  • திவாகரம் நிகண்டு

உசாத்துணை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.