செ. அருட்செல்வ பேரரசன்
செ. அருட்செல்வப்பேரரசன்
மூல மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிரார். ஹரிவம்சபுராணத்தை மொழியாக்கம் செய்திருக்கிறார். திருவொற்றியூரில் வசிக்கிறார். கணினி வரைகலையாளர்.
பிறப்பு, கல்வி
திருவொற்றியூரில் சி.செண்பகக்குட்டி, கு.பெரியநாயகி ஆகியோருக்கு மகனாக 6/4/1978ல் பிறந்தார் சென்னை பாரிமுனை, தூய மரியன்னை ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பள்ளிப்படிப்பையும், புழல் ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பையும் முடித்தார்
தனி வாழ்க்கை
அ.லட்சுமியை 26/6/ 2004ல் மணந்தார், மகன்கள் செழியன் நன்மாறன், இளமாறன்
இலக்கிய வாழ்க்கை
கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட “The Mahabharata” ஆங்கில வடிவத்தை 2012 முதல் 2019 வரை மொழிபெயர்த்து எழுதிய முதல் படைப்பான முழுமஹாபாரதம். 2020ல் பிரசுரமானது.
இப்படைப்பு http://mahabharatham.arasan.info/ என்னும் தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. ஒவ்வொரு பருவமும் ஒலி வடிவிலும் வெளியிட்டிருக்கிறார்.
இப்போது வால்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யும் பெரும்பணியை தொடங்கியிருக்கிறார். மூலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சொல்லெண்ணி உணரும்படி உருவாக்காப்ட்டிருக்கும் இந்த மொழியாக்கம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவியானது. தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென ஜெயகாந்தன், கல்கி ஆக்கியோரை குறிப்பிடுகிறார்
நூல்பட்டியல் -[இதுவரை]
அச்சுநூல்கள்
- முழுமஹாபாரதம் (14 தொகுதிகள்)
- நளதமயந்தி
- நாளவேள்வி
கிண்டில் மின் நூல்கள்
- ஹரிவம்சம் 1 & 2 பாகங்கள் (3ம் பாகம் இன்னும் முற்றுபெறவில்லை)
- ஜெயம் வரிசையில் அ) வெற்றிமுழக்கம் ஆ) கொற்றங்கூடல் என்ற இரு பாகங்கள்
கிண்டில் சிறு மின்நூல்கள்
- உதங்க சபதம்
- கருடனும் அமுதமும்
- துஷ்யந்தன் சகுந்தலை
- யயாதி
- சந்தனு சத்தியவதி
- அம்பை – சிகண்டி
- நாகவேள்வி
இணைப்புகள்
- https://blog.arasan.info/
- வெண்முரசு விழா - என் அகப்பயணம் (arasan.info)
- அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- மஹாபாரதம் - கிஸாரி மோஹன் கங்குலி, செ அருட்செல்வப்பேரரசன் - Zero degree/எழுத்து பிரசுரம் | panuval.com
- https://harivamsam.arasan.info/p/harivamsam-contents.html