செ.மெ.பழனியப்பச் செட்டியாா்
செ.மெ.பழனியப்பச் செட்டியாா் (பிப்ரவரி 15, 1920 – செப்டம்பர் 1, 2005) பதிப்பாளர். தொழிலதிபர். பழநியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ‘ஏஷியன் பேரிங் லிமிடெட்’ என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பழநியப்பா பிரதர்ஸ் பதிப்பித்த கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.
பிறப்பு, கல்வி
செ.மெ. பழனியப்ப செட்டியாா், பிப்ரவரி 15, 1920 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில், செ. மெய்யப்பச் செட்டியார் – கண்ணம்மை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். ராயவரம், சு.கதி.காந்தி பாடசாலையில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து தந்தையின் தொழில் நிமித்தம் பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்குச் சென்றார். அங்கு செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். பின் தமிழகம் வந்தார். சிதம்பரத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். கடியாபட்டி ஸ்ரீபூமிஸ்வர சுவாமி உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்து படித்தார்.
தனி வாழ்க்கை
செ.மெ பழனியப்பச் செட்டியார், மணமானவர். மனைவி: மீனாட்சி.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.