செல்வேந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Selventhiran.jpg|thumb]]
[[File:Selventhiran.jpg|thumb|செல்வேந்திரன்]]
செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர்.  
செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர்.  



Revision as of 16:27, 19 January 2022

செல்வேந்திரன்

செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர்.

தனிவாழ்க்கை

செல்வேந்திரன் ஆகஸ்ட் மாதம் 22, 1982 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் பிறந்தார். கதிரேசன் மற்றும் மெர்சி பாப்பா தம்பதியினருக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் இரண்டு அக்காக்களுக்குப் பிறகு கடைசி மகனாகப் பிறந்தார். சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பு பாதியில் தடைபட்டது. அப்பாவின் தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்த்தார். பின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தில் இளங்கலை அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றார். மனைவி திருக்குறளரசி. பிள்ளைகள் இளவெயினி மற்றும் இளம்பிறை.

இலக்கிய வாழ்க்கை

2004-2008 வரை ஆனந்த விகடனின் சர்குலேஷன் பிரிவிலும், 2009-2020 வரை தி ஹிண்டு (ஆங்கில நாளிதழ்) விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் பணியாற்றினார். இந்த கால கட்டங்களில் அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இளமை காலத்தில் ”செம்புலம்” எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தினார். வாசிப்பது எப்படி, பாலை நிலப்பயணம், நகுமோ லே பயலே, உறைப்புளி போன்ற புத்தகங்களின் ஆசிரியர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிறுவிய காலத்தினின்றே உடன் நிற்பவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை, வசனங்கள் எழுதுகிறார். அர்த்தமண்டபம் என்ற நிறுவனத்தின் மூலம் இலக்கியம், வணிகம், சினிமா மற்றும் பிற துறைகளில் சாதித்தவர்களுக்கு தன்வரலாற்று நூல்கள் வெளிவர உதவுகிறார். வாசிப்பு, இலக்கியம் மற்றும் விற்பனை குறித்த பல உரைகளை ஆற்றி வருகிறார்.

ஆவணப்படம்

அஜிதனுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகனுக்கான “நீர், நிலம், நெருப்பு” ஆவணப்படத்தைக் கொணர்ந்தார். வண்ணதாசனுக்காக “நதியின் பாடல்” எனும் ஆவணப்படத்தைக் கொணர்ந்தார். அரசியல் செயல்பாடுகள் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியூக அலோசகராக செயல்பட்டு வருகிறார்.

சொல்முகம்

கோவையில் மொழிபெயர்ப்பாளர் நரேனுடன் இணைந்து சொல்முகம் என்ற வாசகர் வட்டத்தை உருவாக்கி மாதக் கூடுகைகள் நடத்தி வருகிறார். இதில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறுகிறது.

படைப்புகள்

வாசிப்பது எப்படி – ஜூலை 2020 பாலை நிலப்பயணம் – ஜூலை 2020 நகுமோ லே பயலே – ஆகஸ்ட் 2020 உறைப்புளி – ஏப்ரல் 2020 How to Read – ஆங்கிலம்

படைப்புகள் பற்றி

வாசிப்பது எப்படி

வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒரு தமிழ் இலக்கிய வாசகராக அதிலிருந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்தவற்றைப் பகிர்ந்து கொள்லும் நூல்.

பாலை நிலப்பயணம்

எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பன்னிரெண்டு நண்பர்களுடன் ராஜஸ்தான் ஜெய்பூரிலிருந்து குஜராத் கட்ச் வரையான பயணத்தைப் பற்றிய ஒரு பயணியின் குறிப்புகள் அடங்கிய நூல். பாலைப்பயணமும், அதன் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளடங்கிய நூல்.

நகுமோ லே பயலே

நகைச்சுவை/ பகடிக் கட்டுரைகளின் தொகுப்பு.

உறைப்புளி

தொழில் முனைவு, சூழியல், இதழியல், இலக்கியம் ஆகிய துறைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளும், மேடை உரைகளுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலான கட்டுரைகள் தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்தன.

இணைப்புகள்

http://selventhiran.blogspot.com/ ஜெயமோகன் ஆவணப்படம்: https://youtu.be/qSuCmuDskiA வண்ணதாசன் ஆவணப்படம்: https://youtu.be/S5_RNslW9Wg https://youtu.be/1SgyN1P2Mkc