under review

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன்

From Tamil Wiki
Revision as of 14:22, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றின் மணிமிடைப் பவளத்தில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

கொற்றன் செயலூரில் சாத்தனுக்கு மகனாகப் பிறந்தார். செயலூரில் பொன்வாணிகம் செய்தார். பொன் வகைகளில் ஆடகமும், சாம்பூநதமும் மாற்றுகுறைதல் இல்லாததால் பெரும்பொன் என்றும் கிளிச்சிறையும் சாதரூபமும் மாற்று குறைந்ததால் இளம்பொன் என்றும் அழைக்கப்படுகிறது. செயலூரில் இளம்பொன் வணிகம் செய்ததால் செயலூர் இளம்பொன் சாத்தன். உறையூர் என்பதற்கு பதில் தவறுதலாக செயலூர் என்று உரையாசிரியர்கள் எழுதியதாக புலவர் கா.கோவிந்தன் குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கொற்றன் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றின் 177-வது பாடலாகச் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளது. தலைவன் கடல் கடந்து வடக்கே உள்ள எருமை நாடாண்ட வடுகர் பெருமகனாகிய புல்லி என்பவனுக்குரிய அயிரியாற்றைத்தாண்டி பொருள் ஈட்டச் சென்ற செய்தி சொல்லப்படுகிறது. "தனக்கென வாழாப் பிறர்குரியப் பண்ணன்" என்று பாராட்டப் பெற்ற சிறுகுடிக்கிழான் பண்ணனின் வெற்றிச் சிறப்பினையும், மாவின் சிறப்பினையும் பாடல் கூறுகிறது.

பாடல் நடை

கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்

உசாத்துணை


✅Finalised Page