under review

சு. நமச்சிவாயப்புலவர்

From Tamil Wiki
Revision as of 12:46, 28 November 2022 by Ramya (talk | contribs) (Created page with "சு. நமச்சிவாயப்புலவர் ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சு. நமச்சிவாயப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னும் ஊரில் சுப்பிரமணியபிள்ளைக்கு மகனாகப் பிறந்தார்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சு. நமச்சிவாயப்புலவர் ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சு. நமச்சிவாயப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னும் ஊரில் சுப்பிரமணியபிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இசைக்கலையிலும் ஆர்வம் உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

சு. நமச்சிவாயப்புலவர் பல தனிநிலைச் செய்யுள்களையும் கீர்த்தனங்களையும் இயற்றினார்.

மாணவர்கள்
  • வே. கணபதிப்பிள்ளை
  • க. வேலுப்பிள்ளை

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை: noolaham



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.