under review

சு. நமச்சிவாயப்புலவர்

From Tamil Wiki
Revision as of 06:10, 18 March 2023 by Logamadevi (talk | contribs)

சு. நமச்சிவாயப்புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சு. நமச்சிவாயப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை சுப்பிரமணியப்பிள்ளை.உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இசைக்கலையிலும் ஆர்வம் உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

சு. நமச்சிவாயப்புலவர் பல தனிநிலைச் செய்யுள்களையும் கீர்த்தனங்களையும் இயற்றினார்.

மாணவர்கள்
  • வே. கணபதிப்பிள்ளை
  • க. வேலுப்பிள்ளை

உசாத்துணை


✅Finalised Page