being created

சுரேஷ்குமார இந்திரஜித்: Difference between revisions

From Tamil Wiki
Line 19: Line 19:


இளம் வயதில் ‘சந்திப்பு’ என்ற பெயரில் 1986ல் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.
இளம் வயதில் ‘சந்திப்பு’ என்ற பெயரில் 1986ல் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.
முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். நடைபெற்ற கூட்டங்களிலேயே சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் நடைபெற்றது.  
முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர்.  
மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடந்தது.
சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் நடைபெற்றது. மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.


80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60க்கும் மேற்பட்ட குறுங்கதைகள், மற்றும் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் சுமார் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். புதிய நாவல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மற்றும் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் சுமார் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். இவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி.
 
இவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி.
 
தன்னளவில் நவீனத்தைப் புரிந்து கொள்ளல் மூலம் தனக்கான நடை, மொழிதல் பண்புகள் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கடந்து செல்லும் முறைமை இவருக்கு இயல்பாகக் கைகூடி வருகிறது. புலன்களால் அறியப்படும் புறவுலகத்தின் பின்னணியில் அகவயமான உலகத்தை எழுதுதல் இவரிடம் தனிச்சிறப்பாக உள்ளது. இவரது படைப்புலகம் உணர்த்தும் தரிசனம் இவ்வாறுதான் வெளிப்படுகிறது.


இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும்.
இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும்.
Line 32: Line 28:
தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும் தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.
தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும் தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.


அவருடைய கதைகள் நுட்பங்கள் புதைந்த ‘புதையல் வேட்டை’ விளையாட்டை ஒத்தது. வாசகன் சிறு சிறு குறிப்புகளைக் கொண்டு கதையை தன் மனதில் பின்னியபடி வருகிறான். நுட்பங்களின் சங்கிலிப் பிணைப்பு இதில் முக்கியம். நுட்பங்களைத் தவறவிட தவறவிட கதை அவனுக்கு பிடிபடாமல் ஆகிறது. இறுதியில் அவன் இலக்கை அடையும்போது அது கதாசிரியர் உத்தேசித்த இலக்காக இருக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால் எழுத்தாளன் எந்த இலக்கையுமே உத்தேசிக்கவில்லை என்பதே உண்மை. ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறினார்.
ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறியுள்ளார்.


== விருது ==
== விருது ==

Revision as of 08:58, 26 February 2022

This page is being created by muthu_kalimuthu

சுரேஷ்குமார இந்திரஜித், தமிழ் சிறுகதை, நாவல், குருங்கதைகள் எழுத்தாளர். கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த ஊர் இராமேஸ்வரம். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பியூசியை மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படித்தார். இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தனி வாழ்க்கை

1979 முதல் எழுதி வருகிறார். தமிழக அரசில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றார். எழுத்து தவிர இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர். மணி அய்யர் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தவை. 1983ல் திருமணம் ஆயிற்று. இரண்டு பெண் குழந்தைகள்.

பங்களிப்பு

இலக்கியம்

இளம் வயதில் ‘சந்திப்பு’ என்ற பெயரில் 1986ல் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் நடைபெற்றது. மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மற்றும் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் சுமார் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். இவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி.

இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும்.

தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும் தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.

ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறியுள்ளார்.

விருது

2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது சுரேஷ்குமார இந்திர ஜித்துக்கு வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் நாம் காண முடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் அசலான பங்களிப்பு சிறுகதைகளில் தான். சிறுகதைகளின் எல்லையை முன்னகர்த்தியவர் என தயங்காமல் சொல்ல முடியும். நில காட்சியோ  புற விவரணையோ அற்ற கதை கூறும் முறை. மரபின் பின்புலம் மிக அரிதாகவே  வெளிப்படும். அவருடைய தத்துவ தளம். இருத்தலியல் சார்ந்தது.   கவித்துவமான படிமங்களும் மிக அரிதாகவே கையாளப்படும். உணர்ச்சிகரமான பயன்பாடுகள் நாடகீய உச்சங்கள் போன்றச்வையும் அவருடைய கதைகளில் அரிதுதான். கட்டுப்பாட்டை மீறி ஒரு சொல்லையும் கதையில் விழ விடமாட்டார் என்பதால் பித்து கணம் எதுவும் கதைகளில் வெளிப்படுவதில்லை. எல்லைகள் என உள்ளவையே அவருடைய தனித்தன்மையாகவும் திகழ்கின்றன. கதைகூறு முறையில் இயல்பான இடைவெளிகளின் வழியாக அகத்தின் உள்ளே புதைந்திருப்பதை அவருடைய கதைகள் சுட்டிக்காட்டுபவை.  என சொல்லலாம். வெளிப்படுத்தப்படுபவை உள்ளே எப்படி தலைகீழாக உள்ளன என்பதை அவருடைய கதைகள் மீள மீள சொல்கின்றன. அவருடைய சிறுகதைகளில் மிக நீளமான கதை என்பது பன்னிரண்டு பக்கங்கள் நீளும்.

சொற் சிக்கனம் என்பது அவருடைய கதைகளின் மிக முக்கியமான இயல்பு. அபாரமான அங்கதம் வெளிப்படும் சில கதைகள் உண்டு. சுரேஷ்குமார இந்திரஜித் பலவிதமான வடிவங்களில் கதைகளை கூறியுள்ளார். அவ்வடிவங்கள் மிக வெற்றிகரமாக கதையின் வாசிப்பை மேம்படுத்த பங்களிப்பு ஆற்றியுள்ளன.

தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது.

அ.குறைவான சொற்களில் கதைமாந்தர்களின் மனநிலைகள் விளக்கப்படுகின்றன என்பதனால் ஒரு நல்ல வாசிப்புக்கு வாசகர்களின் கற்பனை மிக முக்கியமானதாக அமைந்து விடுகிறது.

ஆ.மனித உறவுகளைப் பற்றிய சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் மேலும் சில அவதானிப்புகள் சுவாரசியமானவை.

இ. தற்செயல் நிகழ்வுகளின் மர்மங்கள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

ஈ.சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகின் மிக முக்கியமான அம்சமாக நான் கருதுவது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறையை குறித்த பதிவுகள்.

உ. இறுதியாக சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளில் பகடி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

கதாபாத்திரங்கள் மற்றும் கதை நிகழும் சூழல்களின் விரிவான சித்தரிப்புகள் மூலம் எழுத்தாளர் தன்னுடைய புனைவுலகை உருவாக்குதல் என்பது கலை. ஆனால் மிகக் குறைவான சொற்களில் சித்தரிப்புகளில் அதை சாதிப்பது என்பது மேலான கலை. சுரேஷ்குமார இந்திரஜித் இரண்டாவது வகையில் மிக முக்கியமான எழுத்தாளர்.

நூல் பட்டியல்

நாவல்கள்

  • கடலும் வண்ணத்துப்பூச்சியும்
  • அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

சிறுகதை தொகுப்புகள்

  • அலையும் சிறகுகள்
  • மறைந்து திரியும் கிழவன்
  • மாபெரும் சூதாட்டம்
  • அவரவர் வழி
  • நானும் ஒருவன்
  • நடன மங்கை
  • நள்ளிரவில் சூரியன்
  • பின்நவீனத்துவவாதியின் மனைவி
  • பின்னணிப் பாடகர்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.