under review

சுபர்சுவநாதர்

From Tamil Wiki
Revision as of 14:42, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
சுபர்சுவநாதர்

சுபர்சுவநாதர் சமணத்தின் ஏழாவது தீர்த்தங்கரர்.

புராணம்

சுபர்சுவநாதர், வாரணாசியில் மன்னர் சுப்ரதிஷித் மற்றும் ராணி பிருத்விசேனா ஆகியோருக்கு இக்சவாகு வம்சத்தில் ஆனி வளர்பிறை 12-ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.அவர் சம்மத் ஷிகர்ஜியிடமிருந்து நிர்வாணத்தை அடைவதற்கு முன்பு 20 லட்சம் பூர்வா ஆண்டுகள் வாழ்ந்தார். புரட்டாசி வளர்பிறையில் சுபத்ர விமனிலிருந்து இந்திரன் சுபார்ஷ்வநாத்தின் அவதாரமாக ராணி பிருத்விஷேனாவின் வயிற்றில் உருவெடுத்தார். சுபார்ஷ்வநாத் பருவ வயதில் தன் முற்பிறப்பை உணர்ந்தார். நிலையாமையை புரிந்து கொண்டவர் சேதுக் காட்டிற்குச் சென்று ஷிரிஷ் மரத்தடியில் துறந்தார். அவர் மற்ற ஆயிரம் அரசர்களுடன் சேர்ந்து ஆனி வளர்பிறை 12-ஆம் நாள் அன்று ஜைனேஷ்வரி தீட்சை எடுத்தார். சந்நியாசியாக அவரது முதல் பிச்சை சோம்கோட்டின் மன்னர் மகேந்திரதத்திடம் இருந்து வந்தது. 9 மாதங்கள் கடுமையான தவம் மற்றும் தொடர்ச்சியான தியானத்தில், இறைவன் பங்குனி தேய்பிறையில் கேவல்ய ஞானம் அடைந்தார். பிரசங்கங்கள் அளித்து, உலகளவில் தனது கற்றலைப் பிரசங்கித்த பிறகு, இறைவன் நிர்வாணத்தை அடைய சம்மேட் சிகர் மலைக்குச் சென்றார். பகவான் சுபார்ஷ்வநாத் முக்தி அடைந்து, பங்குனி தேய்பிறை ஏழாம் நாள் அதிர்ஷ்ட நாளில் மோட்சத்திற்குச் சென்றார்.

சுபர்சுவநாதர் சிலை

அடையாளங்கள்

  • உடல் நிறம்: பச்சை
  • லாஞ்சனம்: ஸ்வஸ்திகா
  • மரம்: ஷிரிஷ் (அகேசியா அல்லது மைமோசா) மரம்
  • உயரம்: 200 வில் (600 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 20 லட்சம் பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: சோம்கேத் நகர் (கீர்) மன்னர் மகேந்திரதத்தா
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 95 (ஸ்ரீபால்)
  • யட்சன்: வர்னாதி தேவர்
  • யட்சினி: காளி தேவி

சிலை

ஐந்து தலைகள் கொண்ட பாம்பு கவசம் போல சுபார்ஷ்வநாதரின் தலையைச் சுற்றி குடையாக காணப்படுகிறது. தாமரை அல்லது கயோத்சர்கா தோரணையில் சித்தரிக்கப்படுகிறார். உடலின் பின்னால் பாம்பின் சுருள்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ள பார்ஷ்வந்தனைப் போலல்லாமல், சுபர்ஷ்வா தலைக்கு மேல் மட்டும் பாம்பு தலைகளுடன் உள்ளார். சுபார்ஷ்வாவின் ஸ்வஸ்திகா சின்னம் அவரது கால்களுக்கு கீழே ஒரு சின்ன அடையாளமாக உள்ளது.

இலக்கியம்

சுபஸ்நாத் சரியம் 1422 - 1423-ல் தில்வாராவில் மொக்கலின் ஆட்சியின் போது தொகுக்கப்பட்டது.

கோயில்கள்

  • பாவகத் ஜெயின் கோவில்
  • ரணக்பூரில் உள்ள சுபர்ஷவநாத் பசதி
  • ஸ்ரீ மாண்டவகத் தீர்த்தம், மாண்டு
  • சுபர்ஷவநாத் ஜெயின் பசதி, பதாயினி
  • சுபர்ஷவநாத் ஜெயின் பசதி, நர்லை

உசாத்துணை


✅Finalised Page