சுந்தராம்பாள் இளஞ்செல்வன்
சுந்தராம்பாள் ஓர் மலேசிய எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
சுந்தராம்பாள் கெடா மாநிலத்தில் உள்ள சுங்கைப்பட்டாணியில் பிப்ரவரி 2, 1957ல் பிறந்தார். பெற்றோர் சதாசிவம், கண்ணம்மா ஆவர். ஐந்து சகோதரர்கள் இரண்டு சகோதரிகள் உள்ள குடும்பத்தில் முதல் பிள்ளை.
சுந்தரம்பாளி ஆரம்ப கல்வியை சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை பத்து டூவா இடைநிலை பள்ளியிலும் கற்றார்.
திருமணம், தொழில்
சுந்தராம்பாள் எழுத்தாளர் எம்.ஏ. இளஞ்செல்வனை 1.1.2022ல் மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். சுங்கைப்பட்டாணியில் மலேசிய நண்பன் பத்திரிகை முகவராக இவர் பணியாற்றினார்.
தினக்குரல் பத்திரிகையின் துணை ஆசிரியர்
ஞாயிறு குரலின் துணையாசிரியர்
இலக்கிய வாழ்க்கை
சுந்தராம்பாளின் முதல் சிறுகதை தமிழ் நேசனில் வெளிவந்தது. அப்போது அவருக்கு பதினாறு வயது. தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதினார். பல இலக்கியப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளார். வானொலிக்கும் எழுதியுள்ளார்.
இலக்கிய செயல்பாடு
கெடா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர்
இளஞ்செல்வன் பெயரில் எழுத்தாளர்களுக்கு இன்று வரை பரிசுகள் வழங்கி வருகிறார்.
சமூகச் செயல்பாடு
கெடா மாநில சமுக வள நல இயக்கத்தின் ஆலோசகர்
பரிசுகள், விருதுகள்
- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'முருகு சுப்பிரமணியம்' தங்கப் பதக்க விருது அணிவிப்பு
- கெடா சுல்தான் இவருக்கு BKM எனும் விருது வழங்கினார். - 2012
- பொன்கூடு சிறுகதை நூலுக்கு 'கரிகாலன் விருது' - 2013
நூல்கள்
மனசே மனசே (அனுபவக் கட்டுரை நூல்) - 2017
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.