being created

சுதேசமித்திரன்

From Tamil Wiki
Revision as of 00:36, 27 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுதேசமித்திரன் வார இதழ் - 1931
சுதேசமித்திரன் வார இதழ் - 1941

சுதேசமித்திரன், தமிழில் வெளியான முதல் நாளிதழ். 1882-ல், வார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன், 1899 முதல் நாளிதழாக வெளிவந்தது. இதனைத் தொடங்கியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். இவர் ஹிந்து நாளிதழின் ஆசிரியர். விடுதலை வேட்கை உணர்வை வெளிப்படுத்தும் இதழ்கள் தமிழில் அக்காலத்தில் இல்லை என்பதால், அதற்காகவே சுதேசமித்திரன் இதழைத் தொடங்கினார். மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சுதேசமித்திரன் இதழின் முக்கிய நோக்கமாக இருந்தது. பாரதியார் இவ்விதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பு, வெளியீடு

தேசபக்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர், ஹிந்து நாளிதழின் ஆசிரியர். அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஆங்கில இதழ்களைப் போலத் தமிழிலும் ஒரு இதழ் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினார். தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக, 1882, மார்ச்சில் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கினார்.

1893-ல், வாரம் இருமுறை இதழாகச் சுதேசமித்திரன் வெளிவந்தது. 1897-ல், வாரம் மும்முறையானது. 1899-ல், நாளிதழானது. அரசியல், சமூகம், தேசியம் சார்ந்து பல செய்திகளை சுதேசமித்திரன் வெளியிட்டது. நாட்டுப்பற்றுடன், மொழிப்பற்று வளரவும் உறுதுணையாக இருந்தது. மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

சி.வி. சுவாமிநாதையர் இதன் ஆசிரியராகச் சேர்ந்ததும் இதழ் மேலும் பொலிவு பெற்றது. 1904-ல், சுப்ரமணிய பாரதியார் இதன் ஆசிரியராகச் சேர்ந்தார். அவருக்குப் பின் சி. ஆர். ஸ்ரீனிவாசன் ஆசியரானார்.


















🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.