சுதந்திர பூமி
சுதந்திர பூமி ( 1973) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். இந்திரா பார்த்தசாரதியின் தொடக்ககால நாவலாகிய இது டெல்லியின் அதிகார அரசியலை பகடியுடன் சித்தரிக்கிறது.
எழுத்து, வெளியீடு
இந்திரா பார்த்தசாரதி இந்நாவலை 1973ல் எழுதினார். தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது
கதைச்சுருக்கம்
தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பிற்காக டெல்லி செல்லும் முகுந்தன், பேராசிரியர் மிஸ்ராவைச் சந்திக்கிறான். முகுந்தனைப் பயன்படுத்தி மிஸ்ரா அரசியலில் முன்னகர்கிறார்.மிஸ்ராவுக்கு சமையற்காரனாக வாழ்க்கையை தொடங்கும் முகுந்தன் டாக்டர் சரளா பார்க்கவா போன்ற அதிகார தரகர்களுடன் அரசியல் விளையாடி மெல்ல மத்திய அமைச்சரவையிலேயே இடம்பெறுகிறான். அவனை தமிழக அரசியலுக்கு அனுப்புகிறார் பிரதமர்.
இலக்கிய இடம்
இந்திரா பார்த்தசாரதி டெல்லியின் அதிகாரவிளையாட்டை அடிப்படையாக வைத்து எழுதிய இந்நாவல் தலைநகரின் உயர்மட்ட அரசியல் விளையாட்டு பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எனப்படுகிறது