சுஜனி தங்கராஜ்
From Tamil Wiki
சுஜனி தங்கராஜ் (பிறப்பு: டிசம்பர் 15,1986) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுஜனி தங்கராஜ் இலங்கை வவுனியாவில் தங்கராஜ், பரமேஸ்வரி இணையருக்கு டிசம்பர் 15,1986-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சுஜனி தங்கராஜ் ஏழாம் வகுப்பு முதல் கவிதை, கதை, கட்டுரை, பேச்சு, வில்லுப்பாட்டு, மேடை நாடகம் போன்றவற்றில் பங்கேற்றார். பத்திரிகை, வானொலி, இணையங்களில் இவரின் கவிதை, கட்டுரை வெளிவந்தன. பாடல்களை பல எழுதினார். அவற்றில் இரு பாடல்கள் இறுவெட்டுக்களாக வெளிவந்தன.
விருதுகள்
கவிச்சிகரம், கவியரசி போன்ற விருதுகளைப் பெற்றார்.
நூல் பட்டியல்
உசாத்துணை
- ஆளுமை:சுஜனி, தங்கராஜ்: noolaham
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.