சீனிச்சர்க்கரைப் புலவர்: Difference between revisions
(changed template text) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 13: | Line 13: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 08:40, 3 December 2022
சீனிச்சர்க்கரைப் புலவர், புலவர் பரம்பரையில் தோன்றியவர். ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப் புலவரின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி.
இலக்கிய வாழ்க்கை
சீனிச்சர்க்கரைப் புலவர், ராமநாதபுர சமஸ்தான வித்வானாக இருந்தவர். மயூரகிரிக்கோவை இயற்றிய சாந்துப்புலவர் இவரது சகோதரர். சீனிச்சர்க்கரைப் புலவர், பெரும் புலவராக விளங்கிய தனது பாட்டனார் சாந்தப் பிள்ளையிடமும், தந்தையார் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப் புலவரிடமும் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிறந்த புலவராக விளங்கினார். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவராக இருந்தார்.
சீனிச்சர்க்கரைப் புலவர் ராமாயணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில் வல்லவராக இருந்தார். 'திருச்செந்தூர்ப் பரணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர். ஆதினகர்த்தராக இருந்த திருச்சிற்றம்பல தேசிகர் மீது கலம்பகம் பாடியுள்ளார். திருச்சிற்றம்பல தேசிகரிடம் தீட்சை பெற்றவர். சீனிச்சர்க்கரைப் புலவரின் வழி வந்தவர்கள் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்தனர்.
சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய முக்கியமான நூல்களில் ஒன்று புகையிலை விடு தூது
புகையிலை விடு தூது
பழநி மலையில் குடிகொண்டுள்ள பால சுப்பிரமணியக் கடவுளின் மீது, ஒரு தலைவி புகையிலையைத் தூதாக அனுப்புவதே புகையிலை விடு தூது. இந்த நூலில், சீனிச்சர்க்கரைப் புலவர் புகையிலையின் பெருமையை 59 கண்ணிகளில் பாடலாக அமைத்துள்ளார். அவற்றுள் 53 கண்ணிகள் புகையிலையின் பெருமையைப் பேசுகின்றன. இறைவனுக்கும் புகையிலைக்கும், தமிழுக்கும் புகையிலைக்கும் எனப் பல சிலேடைப் பாடல்கள் இந்த நூலில் அமைந்துள்ளன.
தமிழில் வெளியான தூது இலக்கியங்களுள் நகைச்சுவைப் பாடல்கள் அதிகம் கொண்ட தூது இலக்கிய நூல் புகையிலை விடு தூது.
உசாத்துணை
தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்
✅Finalised Page