under review

சி. சிவராமமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(19 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர்,  சமஸ்கிருத அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும்,  புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும்  பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும்,  தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய  அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றார்.  
[[File:C.sivaramamurthy.jpg|thumb]]
 
டாக்டர் சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர்,  சமஸ்கிருத அறிஞர்.  இந்தியாவின்  குறிப்பிடத்தக்க கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இந்தியப் படிமவியலில் (iconography), குறிப்பாக நடராஜ தத்துவத்தில் அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும்,  புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும்  பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும்,  தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய  அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண், லலித் கலா அகாதெமியின் மிக உயர்ந்த 'ரத்னா'  உட்பட பல விருதுகளைப் பெற்றார். கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார். 
== பிறப்பு, கல்வி ==
==பிறப்பு, கல்வி==
சிவராமமூர்த்தி [[அப்பைய தீட்சிதர்]] பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.  
சிவராமமூர்த்தி [[அப்பைய தீட்சிதர்]] பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு 1909-ல் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.  
 
==தனி வாழ்க்கை==
== தனி வாழ்க்கை ==
 
சிவராமமூர்த்தி  சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.
சிவராமமூர்த்தி  சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.
==அருங்காட்சியகவியல்( Museology)==
சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையில் (Archeological Survey of India)  கண்காணிப்பாளராகப் பணியேற்றார்.  கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் (Indian Museum, Kolkatta) தொல்லியல் துறைத் தலைவராக இருந்தார். தில்லியில்  இந்திய தேசிய அருங்காட்சியகத்தின்(The National Museum, New Delhi) காப்பாளராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றி அதன் இயக்குனராக உயர்ந்தார். அங்கு பணிபுரிந்த காலத்தில் பல முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த  இருந்த இந்திய தேசிய அருங்காட்சியகத்திற்கு அடுத்திருந்த  தொழில்துறை அமைச்சகத்தில்  செயலராக இருந்த  [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனுக்கு]] தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார். 


== வரலாற்றாய்வு ==
சர்வதேச அருங்காட்சியக சபையின் (International Council of Museums-ICOM) நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும்., அதன் இந்தியப் பிரிவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.   
சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராகப் பணியேற்றார்.  தொல்லியல் துறை, இந்திய அருங்காட்சியகம் , கல்கத்தா அருங்காட்சியகங்களின் சர்வதேச கவுன்சிலுடன் நெருக்கமாக தொடர்புடைய அவர் அதன் நிர்வாகக் குழுவில் இருந்தார் மற்றும்  இந்திய தேசியக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் இந்திய தேசிய அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த காலத்தில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
 
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன்  இணைந்து, 1938 -ல்அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue) தயாரித்தார்.  
 
ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் தொடங்கப்பட்டபோது முதல் நிதிநல்கை வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி  கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு  22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன்  412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார்.  நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின் வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம்,  ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம்  ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.   
 
பிரெஞ்சு மொழியில் முதலில் வெளியிடப்பட்ட அவரது நினைவுச்சின்ன புத்தகமான ''L'Art en Inde'' தாதாபாய் நௌரோஜி விருதைப் பெற்றது. புத்தகம் ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளில் கிடைக்கிறது. ஏனெனில் அவர் இந்த நிதியத்தின் அறங்காவலர்களால் இந்திய புலமைப்பரிசில் தரத்தை அமைக்கும் முயற்சியில் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கலை, சிந்தனை மற்றும் இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றி அவர் ஒரு சிறப்பு முழுமையான ஆய்வு செய்தார். இரண்டு வருட முயற்சியின் பலனாக "கலை, சிந்தனை மற்றும் இலக்கியத்தில் நடராஜா" என்ற ஒரு நினைவுச்சின்னப் படைப்பை அவர் தனது பெற்றோருக்கு அர்ப்பணித்தார். ''கலை, சிந்தனை மற்றும் இலக்கியத்தில் நடராஜர்'' அவரது முக்கிய சாதனையாகப் போற்றப்படுகிறார். முதன்முதலில் 1974 இல் வெளியிடப்பட்டது, இது 22 வண்ணத் தகடுகள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட ஒரே வண்ணமுடைய விளக்கப்படங்களுடன் 412 பக்கங்கள். நடராஜாஒரு தீம் உயிர் சக்தியையே குறிக்கிறது. படைப்பு, பாதுகாத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று அம்சங்களைக் குறிக்கும் அண்ட ஆற்றலின் வெளிப்பாடாக நடராஜரை முன்னோர்கள் காட்சிப்படுத்தினர். அத்தியாயங்களில் அடங்கும்: நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம் , சிவனின் தாண்டவத்தில் வழங்கப்பட்ட கரணங்கள் , கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள் , சிறந்த நடனக் கலைஞரின் கருத்தின் வேத வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் படம், சில்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம் மற்றும் ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் கருத்து.
 
நடராஜரின் நடனம் எப்போதும் உண்மை மற்றும் அழகு, சக்தி மற்றும் தாளம், இயக்கம் மற்றும் மாற்றம், உணர்தல் மற்றும் கலைப்பு ஆகியவற்றுடன் ஒத்ததாக பார்க்கப்படுகிறது. பார்ப்பனர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களால் நடராஜா பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்; இது இந்தியா மற்றும் நாடுகளின் பல பகுதிகளில் சிலாகித்து, வர்ணம் பூசப்பட்டு, விவரிக்கப்பட்டு பாடப்பட்டுள்ளது. ஆளுமையாகவும், கருப்பொருளாகவும், நடராஜரின் நேரம் மற்றும் காலமற்ற தன்மையின் இரட்டை அம்சங்களுக்கு இதுவே சாட்சி. இசை, நடனம், ஓவியம், சிற்பம் அல்லது கல்வெட்டு என எதுவாக இருந்தாலும், நுண்கலைகளின் தலைசிறந்த தெய்வமாக நடராஜரை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. வேதகாலம் _காஸ்மிக் நடனக் கலைஞரின் வேர்கள் மற்றும் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையானது உலக அரங்கில் சிறந்த நடனக் கலைஞரின் சுரண்டல்களை தெளிவாக விவரிக்கும் புத்தகம் முழுவதும் ஒரு நூலாக நெய்யப்பட்டுள்ளது. இது நடராஜ கருப்பொருளின் பிரபலமான இடங்கள் மற்றும் இந்திய எல்லைகளுக்கு அப்பால் நடராஜரின் கருத்து பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் கொண்டுள்ளது. டாக்டர் சிவராமமூர்த்தி இந்நாட்டின் மிகவும் பாராட்டப்பட்ட கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். அவர் முழு வாழ்க்கையையும் ஐகானோகிராஃபிக்காக , குறிப்பாக நடராஜக் கருப்பொருளுக்காக அர்ப்பணித்தார் . 1968-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாக அவரது ஆராய்ச்சியின் விளைவாக இந்தப் புத்தகம் அமைந்தது . இந்த புத்தகத்திற்கான முன்னுரையில் திருமதி இந்திரா காந்தி இதை இந்திய புலமைப்பரிசில் நினைவுச்சின்னம் என்று அழைத்தார்.
 
== மதிப்பீடு ==
'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை' ( a monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.
 
== விருதுகள் ==


புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன்  இணைந்து, 1938 -ல் அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue)  தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார் (1942).   
==கலை வரலாற்றாய்வு==
[[File:Nataraja.jpg|thumb|goodreads.com]]
======கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர்======
ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் (Jawaharlal Nehnu memorial Fund) தொடங்கப்பட்டபோது அதன் முதல் நிதிநல்கை(fellowship) வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி  கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு  22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன்  412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார்.  நுண்கலைகளின் தெய்வமாக நடராஜர் என்னும் ஆளுமையையும், கருத்தாக்கத்தையும் அதன் காலவெளிகளைக் கடந்த தன்மையையும் எடுத்துக்காட்டி, நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின்  வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம்,  ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம்  ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.                                   
====== பிற கலை/வரலாற்றாய்வு நூல்கள் ======
[[File:5000years.jpg|thumb|catalogue rouge]]
சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்களில் மகாகவி காளிதாசரின் காவியங்களின் தாக்கத்தை ஆய்வு செய்து 'Numismatic parallels of Kalidasa'  என்ற நூலை  எழுதினார்.


== மறைவு ==
மகாபலிபுரச்  சிற்பங்கள், முற்கால சாளுக்கியச்  சிற்பக்கலை, கழுகுமலைச்  சிற்பங்கள்,  சமண மதம் சார்ந்த சிற்பங்கள், குப்தர்காலத்துக்குப் பின்னான சிற்பக்கலையில் காளிதாசரின் தாக்கம் போன்ற சிற்பக்கலை வரலாற்றாய்வு நூல்களை எழுதினார்.  இந்தியாவின் வெண்கலச்சிற்பங்கள் பற்றிய ஆய்வுநூலை எழுதினார்.  தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்களின் சிற்பக்கலை பற்றிய 'The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram' என்ற நூலை எழுதினார்.


== படைப்புகள் ==
இந்திய ஓவியக்கலை, விஜயநகரப்பேரரசின் ஓவியக்கலை போன்ற ஓவியக்கலை ஆய்வுநூல்களையும் எழுதினார். தென்னிந்திய ஓவியக்கலையைப் பற்றிய  அவரது நூல்கள் சோழர்கால ஓவியக்கலையைப் பற்றிய புதிய நுண்ணோக்கைக் கொண்டிருந்தன.


இத்தாலிய இந்தியவியலாளர் Mario Bussagli யுடன் இணைந்து ஐயாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் கலை வரலாற்றை (5000 years of the art of India: with Mario Bussagli) எழுதினார்.
==விருதுகள்.பரிசுகள்==
*Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
*லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
*பத்மபூஷண் விருது
* விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)
== மதிப்பீடு==
சி. சிவராமமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த கலைவரலாற்றாசிரியர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். இந்தியப் படிமவியல் பற்றிய அவரது ஆய்வுகள் முக்கியமானவை.  கல்வெட்டு, நாணயங்கள், சிற்பம் மற்றும் ஓவியங்களின்  இலக்கியத் தொடர்பை ஆய்வுசெய்யும் அணுகுமுறையப் பின்பற்றினார். லலித் கலா அகாதெமியின் மிக உயரிய 'ரத்னா' விருதைப் பெற்றார்.


Nataraja in Art, Thought, and Literature (1974)  நூலை 'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை'  ( A monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார். 


தொல்லியல்  ஆய்வாளர் [[இரா. நாகசாமி|ஆர். நாகசாமி]]  "சிவராமமூர்த்தி தான் காணும் எந்தவொரு கலைப் படைப்பையும் அடையாளம் கண்டு அதன் காலம், இடம், அப்படைப்பு முன்னிறுத்தும் தத்துவம் என  அனைத்தையும் துல்லியமாக அடையாளம் காணும் தன்மை கொண்டவர்" என மதிப்பிடுகிறார். 
==விருதுகள்==
*Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
*லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
*பத்மபூஷண் விருது
*விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)
==மறைவு==
சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.
==படைப்புகள்==
* 5000 years of the art of India: with Mario Bussagli
* An Album of Indian Sculpture
* An Introduction to South Indian Temple Architecture and Sculptures, co-authored with F. H. Gravely
* Approach to nature in Indian art and thought
* Bhagavatpada-Sri Sankaracharya
* Birds and animals in Indian sculpture
* Chitrasutra of the Vishnudharmottara (1978)
* Early Andhra Arts and Iconography
* Early Eastern Chalukya Sculpture (1962)
* Epigraphical echoes of Kalidasa
* Ethical fragrance in Indian art and literature
* Expressive Quality of Literary flavour in Art
* Guide to the Archaeological Galleries, co-authored with F.H.Gravely
* Harappan Art
* Illustrations of Indian Sculptures, co-authored with F. H. Gravely
* Indian Bronze
* Indian Epigraphy and South Indian Scripts (1966)
* Indian Painting
* Kalugumalai and Early Pandyan Rock-cut Shrines
* L'Art en Inde (1974)
* La stupa du Barabudur (in French)
* Mahabalipuram (1952)
* Mirrors of Indian culture
* Nataraja in Art, Thought, and Literature (1974)
* Notes on Hindu Images, co-authored with F. H. Gravely
* Numismatic parallels of Kalidasa
* Panorama of Jain art
* Ramo Vigrahavan dharmah-Rama embodiment of righteousness
* Rishis in Indian art and literature
* Royal conquests and cultural migrations in South India and the Deccan
* Sanskrit literature and art
* Sanskrit Literature and Art: Mirrors of Indian Culture
* Satarudriya – Vibhuti of Siva's Iconography
* Sculpture inspired by Kalidasa
* Shiva
* Sri Lakshmi in Indian art and thought
* The art of India
* The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram
* Vijayanagara paintings
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
*[https://www.indica.today/reviews/indian-painting-sivaramamurti/ Review: Indian Painting (2013) by C. Sivaramamurtiamurti/]
[https://www.indica.today/reviews/indian-painting-sivaramamurti/ Review: Indian Painting (2013) by C. Sivaramamurtiamurti/]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0019282_Numismatic_parallels_of_Kalidasa.pdf numismatic parallels of Kalidasa- C.Sivaramamurthy, Internet archive]
 
*[https://www.newindianexpress.com/cities/chennai/2010/aug/09/sivaramamurti-let-his-art-do-the-talking-176678.html Sivaramamurti let his art do the talking, The Indian Express, August 2010]
[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0019282_Numismatic_parallels_of_Kalidasa.pdf numismatic parallels of Kalidasa- C.Sivaramamurthy, Internet archive]
*[https://archive.org/details/dli.ministry.25978 Indian Sculpture- C.Sivaramamurthy, archive.org]
 
{{Finalised}}
 
[[Category:Tamil Content]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
{{Being created}}
[[Category: Tamil Content]]

Latest revision as of 07:46, 9 April 2024

C.sivaramamurthy.jpg

டாக்டர் சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர், சமஸ்கிருத அறிஞர். இந்தியாவின் குறிப்பிடத்தக்க கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இந்தியப் படிமவியலில் (iconography), குறிப்பாக நடராஜ தத்துவத்தில் அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும், புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும், தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண், லலித் கலா அகாதெமியின் மிக உயர்ந்த 'ரத்னா' உட்பட பல விருதுகளைப் பெற்றார். கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.

பிறப்பு, கல்வி

சிவராமமூர்த்தி அப்பைய தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு 1909-ல் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.

தனி வாழ்க்கை

சிவராமமூர்த்தி சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.

அருங்காட்சியகவியல்( Museology)

சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையில் (Archeological Survey of India) கண்காணிப்பாளராகப் பணியேற்றார். கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் (Indian Museum, Kolkatta) தொல்லியல் துறைத் தலைவராக இருந்தார். தில்லியில் இந்திய தேசிய அருங்காட்சியகத்தின்(The National Museum, New Delhi) காப்பாளராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றி அதன் இயக்குனராக உயர்ந்தார். அங்கு பணிபுரிந்த காலத்தில் பல முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த இருந்த இந்திய தேசிய அருங்காட்சியகத்திற்கு அடுத்திருந்த தொழில்துறை அமைச்சகத்தில் செயலராக இருந்த ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.

சர்வதேச அருங்காட்சியக சபையின் (International Council of Museums-ICOM) நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும்., அதன் இந்தியப் பிரிவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன் இணைந்து, 1938 -ல் அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue) தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார் (1942).

கலை வரலாற்றாய்வு

goodreads.com
கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர்

ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் (Jawaharlal Nehnu memorial Fund) தொடங்கப்பட்டபோது அதன் முதல் நிதிநல்கை(fellowship) வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு 22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன் 412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார். நுண்கலைகளின் தெய்வமாக நடராஜர் என்னும் ஆளுமையையும், கருத்தாக்கத்தையும் அதன் காலவெளிகளைக் கடந்த தன்மையையும் எடுத்துக்காட்டி, நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின் வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம், ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம் ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.

பிற கலை/வரலாற்றாய்வு நூல்கள்
catalogue rouge

சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்களில் மகாகவி காளிதாசரின் காவியங்களின் தாக்கத்தை ஆய்வு செய்து 'Numismatic parallels of Kalidasa' என்ற நூலை எழுதினார்.

மகாபலிபுரச் சிற்பங்கள், முற்கால சாளுக்கியச் சிற்பக்கலை, கழுகுமலைச் சிற்பங்கள், சமண மதம் சார்ந்த சிற்பங்கள், குப்தர்காலத்துக்குப் பின்னான சிற்பக்கலையில் காளிதாசரின் தாக்கம் போன்ற சிற்பக்கலை வரலாற்றாய்வு நூல்களை எழுதினார். இந்தியாவின் வெண்கலச்சிற்பங்கள் பற்றிய ஆய்வுநூலை எழுதினார். தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்களின் சிற்பக்கலை பற்றிய 'The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram' என்ற நூலை எழுதினார்.

இந்திய ஓவியக்கலை, விஜயநகரப்பேரரசின் ஓவியக்கலை போன்ற ஓவியக்கலை ஆய்வுநூல்களையும் எழுதினார். தென்னிந்திய ஓவியக்கலையைப் பற்றிய அவரது நூல்கள் சோழர்கால ஓவியக்கலையைப் பற்றிய புதிய நுண்ணோக்கைக் கொண்டிருந்தன.

இத்தாலிய இந்தியவியலாளர் Mario Bussagli யுடன் இணைந்து ஐயாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் கலை வரலாற்றை (5000 years of the art of India: with Mario Bussagli) எழுதினார்.

விருதுகள்.பரிசுகள்

  • Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
  • லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
  • பத்மபூஷண் விருது
  • விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)

மதிப்பீடு

சி. சிவராமமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த கலைவரலாற்றாசிரியர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். இந்தியப் படிமவியல் பற்றிய அவரது ஆய்வுகள் முக்கியமானவை. கல்வெட்டு, நாணயங்கள், சிற்பம் மற்றும் ஓவியங்களின் இலக்கியத் தொடர்பை ஆய்வுசெய்யும் அணுகுமுறையப் பின்பற்றினார். லலித் கலா அகாதெமியின் மிக உயரிய 'ரத்னா' விருதைப் பெற்றார்.

Nataraja in Art, Thought, and Literature (1974) நூலை 'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை' ( A monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.

தொல்லியல் ஆய்வாளர் ஆர். நாகசாமி "சிவராமமூர்த்தி தான் காணும் எந்தவொரு கலைப் படைப்பையும் அடையாளம் கண்டு அதன் காலம், இடம், அப்படைப்பு முன்னிறுத்தும் தத்துவம் என அனைத்தையும் துல்லியமாக அடையாளம் காணும் தன்மை கொண்டவர்" என மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
  • லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
  • பத்மபூஷண் விருது
  • விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)

மறைவு

சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.

படைப்புகள்

  • 5000 years of the art of India: with Mario Bussagli
  • An Album of Indian Sculpture
  • An Introduction to South Indian Temple Architecture and Sculptures, co-authored with F. H. Gravely
  • Approach to nature in Indian art and thought
  • Bhagavatpada-Sri Sankaracharya
  • Birds and animals in Indian sculpture
  • Chitrasutra of the Vishnudharmottara (1978)
  • Early Andhra Arts and Iconography
  • Early Eastern Chalukya Sculpture (1962)
  • Epigraphical echoes of Kalidasa
  • Ethical fragrance in Indian art and literature
  • Expressive Quality of Literary flavour in Art
  • Guide to the Archaeological Galleries, co-authored with F.H.Gravely
  • Harappan Art
  • Illustrations of Indian Sculptures, co-authored with F. H. Gravely
  • Indian Bronze
  • Indian Epigraphy and South Indian Scripts (1966)
  • Indian Painting
  • Kalugumalai and Early Pandyan Rock-cut Shrines
  • L'Art en Inde (1974)
  • La stupa du Barabudur (in French)
  • Mahabalipuram (1952)
  • Mirrors of Indian culture
  • Nataraja in Art, Thought, and Literature (1974)
  • Notes on Hindu Images, co-authored with F. H. Gravely
  • Numismatic parallels of Kalidasa
  • Panorama of Jain art
  • Ramo Vigrahavan dharmah-Rama embodiment of righteousness
  • Rishis in Indian art and literature
  • Royal conquests and cultural migrations in South India and the Deccan
  • Sanskrit literature and art
  • Sanskrit Literature and Art: Mirrors of Indian Culture
  • Satarudriya – Vibhuti of Siva's Iconography
  • Sculpture inspired by Kalidasa
  • Shiva
  • Sri Lakshmi in Indian art and thought
  • The art of India
  • The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram
  • Vijayanagara paintings

உசாத்துணை


✅Finalised Page